காட்டுப்பகுதியில் பெண்ணொருவர் மர்மமான முறையில் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டிருந்த சம்பவமானது திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடல் முழுவதும் காயங்கள்..! காட்டுக்குள் கிடந்த திருமணமான பெண்ணின் சடலம்! வடமதுரையில் அதிர வைக்கும் சம்பவம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரைக்கு அருகே அமைந்துள்ள நிலபுதூர்ப்பட்டியை சேர்ந்தவர் திவ்யபாரதி. இவர் கருத்து வேறுபாட்டின் காரணமாக தன்னுடைய கணவரை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்தார். இவ்விருவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளினுள்ளே திவ்யபாரதி மர்மமான முறையில் வெட்டப்பட்டு சடலமாக கிடந்தது அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக அவர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் திவ்யபாரதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திவ்யபாரதி என் கணவர் சென்னையில் பணிபுரிந்து வருவதால் அவரை யார் கொலை செய்திருக்கக்கூடும் என்று காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவமானது திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.