என்னை மட்டும் அல்ல, என் மகளையும்..! அதனால் தான்..! காவல் நிலையத்தில் மனைவி கொடுத்த பகீர் வாக்குமூலம்! கணவன் நிலை?

தினமும் மது அருந்திவிட்டு தொல்லை கொடுத்துவந்த கணவரை மனைவி கல்லால் அடித்து கொலை செய்துள்ள சம்பவமானது ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள நாகலூர் என்ற பகுதியில் சேவியர் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மேரி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். சேவியர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.

இதனால் அடிக்கடி வீட்டிற்கு வரும் போது குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் மகனுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கணவர் செய்த அனைத்து கொடுமைகளையும் மேரி பொறுத்து கொண்டு வந்தார். ஊரடங்கு காலத்தில் சேவியரின் கொடுமைகள் அதிகரித்தன. இதனால் மேரி மிகுந்த மனஅழுத்தத்திற்கு ஆளானார். 

சம்பவத்தன்று வழக்கம்போல சேவியர் மது அருந்திவிட்டு மேரியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பொறுமையிழந்த மேரி அருகிலிருந்த கல்லை எடுத்து தன்னுடைய கணவரான சேவியரின் தலையில் போட்டு அவரை கொலை செய்தார். கணவர் இறந்ததை உறுதி செய்த மேரி தலைமறைவானார். காவல்துறையினர் மேரியை வலைவீசி தேடி வந்த நிலையில் அவரே காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தார்.

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேரியை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் மேரியுடன் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.