இந்தியக் கலாச்சார ஆய்வில் ஏன் தமிழர்கள் யாரும் இல்லை.? பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி திடீர் கடிதம்.

இந்தியக் கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய 16 உறுப்பினர்கள் கொண்ட ஆய்வுக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த ஆய்வுக் குழுவில், தமிழர்கள் யாரும் இல்லை என்பது தமிழகத்தில் பல்வேறு தரப்பினரிடம் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாரதப் பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.


அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மத்திய அரசின் கலாசார ஆய்வுக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நிபுணர்களும் இடம்பெற வேண்டும். மத்திய அரசு அமைத்த குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் இடம்பெறாதது வியப்பளிக்கிறது. 

கடந்த ஆண்டு நீங்கள் மகாபலிபுரம் வந்தபோது வரலாற்று சிறப்பு வாய்ந்த சின்னங்களை பார்வையிட்டீர்கள். தமிழர் கலாச்சாரமும், தமிழ் மொழியும் இல்லாவிட்டால் இந்திய வரலாறு முழுமையடையாது. எனவே 16 பேர் கொண்ட குழுவில் தமிழ் அறிஞர்களை இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.