சாத்துக்குடியில் அப்படி என்னதான் இருக்கு? எந்த நோய் வந்தாலும் அதை குடுக்குறாங்க !!

நோயாளியை பார்க்கச் செல்லும்போது சாத்துக்குடி வாங்கிச் செல்வது வழக்கம். ஏனென்றால் காய்ச்சல், அம்மை, பேதி, சளி, இருமல் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து பலன் தரக்கூடியது சாத்துக்குடி.


விலை மலிவாக இருந்தாலும் உடலுக்குத் தேவையான பலத்தையும் புத்துணர்வையும் கொடுக்கக்கூடியது சாத்துக்குடி. வைட்டமின் சி,  மினரல், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை சாத்துக்குடியில் உள்ளன.  

• சாத்துக்குடியில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் சிறுநீரக கோளாறுக்கு மருந்தாகிறது. வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது.

• ஈறுகளில் வீக்கம், பற்கள் ஆடுதல், வாய்ப்புண்ணுக்கு அருமையான மருந்து. சோர்வாக இருக்கும்போது சாத்துக்குடி சாறு குடிப்பது நல்ல பலன் தரும். 

• சாத்துக்குடி பசியை தூண்டும். வாந்தியை தடுக்கும். ருசியின்மையை போக்கும். வயிற்று வலி குணமாகும்.

• எலும்புகளுக்கு பலம் தருவதுடன் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மையும் சாத்துக்குடியில் உள்ளது.

சாத்துக்குடி சாற்றினை தோலில் தடவுவதால், முகத்திலுள்ள கரும்புள்ளி சரியாகும். கண்களுக்கு கீழ் வரும் கருவளையம் மறையும். கழுத்து, கைகளில் உள்ள கருமை மாறும்.