நமக்கு நல்ல நேரம் தெரியும்! ஆனால் தெய்வத்தின் நல்ல நேரம் எது தெரியுமா?

நாம் இராகு காலம், எமகண்டம் என்று எல்லாவற்றையும் பார்த்துத்தான் நல்ல நேரம் கணக்கிடுகிறோம். ஆனால் உண்மையில் எது நல்ல நேரம் தெரியுமா?


எது நல்ல நேரம்?

நல்லதை நினைக்கும் போது

நல்லதை பார்க்கும் போது

நல்லதை கேட்கும் போது

நல்லதை பேசும் போது

எது இராகு காலம்?

அகங்காரம் கொள்ளும் நேரம்

பாசம் கண்களை மறைக்கும் நேரம்

ஆசைகள் எல்லையை மீறும் நேரம்

கோபங்கள் உச்சத்தை தொடும் நேரம்

தேகம் கவர்ச்சிக்கும், கவர்ச்சியில் மூழ்கும் நேரம்

எது குளிகை?

கவலைப்படும் நேரம்

பயப்படும் நேரம்

கலங்கும் நேரம்

முயலாத நேரம்

எது எமகண்டம்?

பொறாமைப்படும் நேரம்

புறம் கூறும் நேரம்

கோள்சொல்லும் நேரம்

சதி செய்யும் நேரம்

எது பிரம்மமுகூர்த்தம்?

தாய் தந்தையை ஆன்மா என உணர்ந்து அவர்களை மதித்து நினைக்கும் நேரம்

கடமையில் வழுவாத நேரம்

அறவழியில் பொருள் சேர்க்கும் நேரம்

எது சுபமுகூர்த்தம்?

சுயநலம் கருதாது பிறருக்கு உதவி செய்யும் நேரம்

சம்பாதிப்பதில் கொஞ்சமாவது தானம் செய்யும் நேரம்

இனிமேலாவது நாம் இவைகளைக் கடைப்பிடிப்போம்.