அரிவாள் முனையில் இளம் பெண்ணுக்கு மதுரையில் நேர்ந்த விபரீதம்! பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

கொள்ளையர்கள் அரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டி பணம் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்யும் சம்பவங்களானவை மதுரை மாவட்டத்தில் சாதாரணமாக நடைபெற்று வருகிறது.


மதுரை மாவட்டத்தில் எம்.கே.புரம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஜோதி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 36. அதே பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன். இவருடைய மகனின் பெயர் ஆதிபரமேஸ்வரன். 22 வயதான இவர் கஞ்சா அடிமையாவார். வீட்டில் இருந்த அனைத்து பணத்தையும் அடுத்த சென்று கஞ்சா வாங்கி விடுவார். இந்நிலையில் ஜோதி இன்று காலை ஜெய்ஹிந்த்புரம் 2-வது மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆதிபரமேஸ்வரன் ஜோதியின் வழியை மறைத்து கஞ்சா வாங்குவதற்கு பணம் கேட்டுள்ளார்.

பணத்தை தர மறுத்த ஜோதியை அரிவாளை காட்டி ஆதிபரமேஸ்வரன் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன ஜோதி தன்னிடம் இருந்த 800 ரூபாயை ஆதிபரமேஸ்வரனிடம் அளித்துவிட்டார். பட்டப்பகலில் தனக்கு நேர்ந்த இன்னல்களை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரை பதிவு செய்த ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் ஆதி பரமேஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோன்ற மற்றொரு சம்பவமும் பட்டப்பகலில் நிகழ்ந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள உடன்குடி பகுதிக்கு உட்பட்ட உலகனேரி பகுதியில் அஸ்வின்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்று காலை கபீர் நகர் பகுதியில் நடந்து கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் அரிவாளை காட்டி அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றுள்ளனர். 

அஸ்வின்குமார் இந்த சம்பவத்தை பற்றி  அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கலைத் துறையினர் விசாரணை நடத்தியதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்  தணக்கன்குலத்தை சேர்ந்த செல்வ பிரகாஷ், லக்ஷ்மணன், அஜித் என்று கண்டறிந்துள்ளனர். அவர்களை கைது செய்து அஸ்வின்குமாரிடம் செல்போனை திருப்பி அளித்தனர். பட்டப்பகலில் மதுரையில் கொள்ளை சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடைபெற்று வருவது மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.