பணக்கார பெண்ணுடன் திருமணம் செய்வதற்காக இளைஞர் ஒருவர் காதலியை கொன்று புதைத்த சம்பவமானது கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேடி வந்த பணக்கார பெண்! அதனால் ஏழைக் காதலியை..! கொடூர காதலனின் அதிர வைக்கும் வாக்குமூலம்!

கேரளாவில் ராக்கி என்ற இளம்பெண் வசித்து வந்தார். ஒரு முறை அகில் என்பவர் இவருக்கு தவறாக காலி செய்துவிட்டார். அகில் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். பின்னர் அகிலின் தொடர்பு ராக்கி அதிகமாகிக்கொண்டே சென்றது. இருவரும் நெருக்கமாக பழக தொடங்கினர். நெருக்கமானது பின்னர் காதலாக மாறியது.
6 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி அன்று இருவருக்கும் ரகசியமாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணமானது இரு வீட்டாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் அகிலின் வீட்டில் அவருக்கு திருமண ஏற்பாடுகள் தொடங்கின. இதனை அறிந்த ராக்கி அகிலிடம் முறையிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி பலத்த சண்டைகள் ஏற்பட்டுள்ளன.
ஒரு கட்டத்திற்கு மேல் ராக்கி அகிலின் பெண் வீட்டாரை பற்றி தகவலறிந்து அவர்களிடம் சென்று அகிலுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதாக கூறியுள்ளார். தான் தான் அவருடைய மனைவி என்பதையும் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்.
இந்த செய்தியானது தெரியவந்தவுடன் அகில் மிகவும் ஆத்திரம் அடைந்தார். தன்னுடைய சகோதரர் ராகுல் மற்றும் நண்பர் ஆதர்ஷுடன் ராக்கியை கொன்றுவிட திட்டமிட்டார்.
சம்பவத்தன்று ராக்கிக்கு புதிய வீடு வாங்கியிருப்பதாக கூறி அகில் அவரை சம்பவயிடத்திற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு மூவரும் இணைந்து ராக்கியின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் அவருடைய ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்தி தீவைத்து உடலை எரித்துள்ளனர்.
அப்பகுதியில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மூவருக்கும் தொடர்பிருப்பதை கண்டுபிடித்துள்ளனர். ராகுல் மற்றும் ஆதர்ஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அகில் ராணுவத்தில் சேர்ந்து விட்டதாகவும் 2 நாட்களுக்குள் சரணடைந்து விடுவதாகவும் கூறியுள்ளார். ஆனால் காவல்துறையினர் நடத்திய குறுக்கு விசாரணையில் அவர் இன்னும் ராணுவத்தில் சேரவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மேற்கூறிய செய்திகள் அனைத்தையும் அறிக்கையாகவும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது சென்ற மாதம் விடுமுறையில் வீடு திரும்பிய அகிலுக்கு பணக்கார வீடு ஒன்றில் அவருடைய குடும்பத்தினர் பெண் பார்த்தனர்.
ராக்கியை விட அந்த பெண் பணக்காரர் என்பதால் அகில் திருமணம் செய்து கொள்ள எண்ணினார். அதற்கு ராக்கி பரஸ்பரமாக சம்மதிக்க மாட்டார் என்பதை அறிந்து அகில் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
நண்பர் ஒருவரிடம் இருந்து காரை இறவலுக்கு வாங்கி அகில் ராக்கியை அழைத்து சென்றுள்ளார். புது வீடு கட்டும் இடத்திற்கு சென்ற பின்னர் ராக்கியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவருடைய உடலை வீட்டின் பின்பகுதியில் 4 அடி நீளமுள்ள குழுவில் நிர்வாணமாக புதைத்தனர்.
உடல் சீக்கிரம் அழுகி போக வேண்டும் என்பதற்காக உப்பு தடவி புதைத்தனர். புதைத்த இடத்தில் சில மரங்களை நட்டு வைத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். செல்போன் சிக்னல் மூலமாக காவல்துறையினர் சம்பந்தப்பட்ட ராகுல் மற்றும் ஆதர்ஷை கைது செய்தனர்.
இந் நிலையில் அகிலும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவமானது கேரளா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.