அவுட் கொடுக்காத அம்பயர்! தானாக வெளியேறிய கோலி! நெகிழ்ந்த பாக்., வீரர்கள்!

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது அம்பயர் அவுட் கொடுக்காத நிலையிலும் விராட் கோலி தானாக வெளியேறியது நெகிழவைப்பதாக இருந்தது.


ஆட்டத்தின் 48வது ஓவரை முகமது ஆமிர் வீசிக் கொண்டிருந்தார். 77 ரன்கள் குவித்து அதிரடியாக கோலி ஆடிக் கொண்டிருந்தார். அப்போது 48வது ஓவரின் 4வது பந்தை பவுன்சராக முகமது ஆமீர் விசினார்.

அந்த பந்தை ரைட் சைடு பலமாக அடிக்க விராட் கோலி முயற்சி செய்தார். ஆனால் பந்து பேட்டில் உரசியபடி விக்கெட் கீப்பர் கையில் கேட்சாக மாறியது. பந்த வீச்சாளர் ஆமிர் உடனடியாக அவுட் கேட்க நடுவர் யோசித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் சற்றும் தாமதிக்காத விராட் கோலி மைதானத்தில் இருந்து பெவிலியனை நோக்கி நடையை கட்டினார். அதன் பிறகு தான் நடுவர் தனது தவறை உணர்ந்து அவுட் கொடுத்தார். ஆனால் அதற்குள் கோலி மைதானத்தை பாதி தூரம்கடந்திருந்தார்.

நடுவர் அவுட் கொடுக்கும் வரை காத்திருக்காமல் அதோடு மட்டும் அல்லாமல் பாக். வீரர்கள் டிஆர்எஸ் எடுக்கட்டும் என்று பொருத்து இருக்காமல் கோலி மைதானதில் இருந்து வெளியேறியது அவரது நேர்மையை காட்டியது.

நடுவர் அவுட் கொடுக்காமலேயே கோலி வெளியேறியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதன் பிறகு ரீப்ளேவில் பார்த்த போது பந்து பேட்டில் பட்டதா இல்லையா என்பதில் குழப்பம் நீடித்தது.  அல்ட்ரா மீட்டரில் கூட பந்து பேட்டில் பட்டது போல் தெரியவில்லை.