இளமதியும் - செல்வனும் தெருக்களில் புணரும் நாய்களா? விசிக பிரமுகர் பகீர் ஒப்பீடு!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் இளமதி விவகாரத்தை பாமக-வோடு சம்பந்தப்படுத்தி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் எனுமிடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள கவுந்தம்பாடி எனும் இடத்தை சேர்ந்த செல்வம் என்பவர் அருகே அமைந்துள்ள குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த இளமதி என்ற பெண்ணை காதலித்து வந்தார். வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டாரும் இவர்களுடைய காதலை நிராகரித்தனர்.

இந்த செய்தியறிந்த அப்போது திராவிடர் கழகத்தினர் சேலம் மாவட்டத்திலுள்ள காவலாண்டியூர் என்னுமிடத்தில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்தனர். இதனை குறுக்கு வழி மூலம் தெரிந்து கொண்ட இருவீட்டாரும் ஆட்களை குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்பினர்.

ஆனால் ஆட்கள் வந்து சேரும் முன்னரே இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த அடியாட்கள் அப்பகுதியிலிருந்த 40-க்கும் மேற்பட்டோர் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். திருமணமான அன்றிரவே காதல் ஜோடியை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றனர். 

உடனடியாக திராவிடர் கழகத்தினர் அப்பகுதி காவல்நிலையத்திற்கு சென்று நிகழ்ந்தவற்றை கூறி கடத்தப்பட்ட இளம் ஜோடியை மீட்டு தருமாறு புகார் அளித்தனர். இந்த சம்பவமானது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்த சம்பவம் குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதாவது "இளமதி மற்றும் செல்வன் ஒரே மில்லில் பணியாற்றி வந்தனர். கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இதனிடையே திராவிட கழக தோழர்கள் இந்த கலப்பு திருமணத்தை நடத்தி வைத்தனர். 

பாமக மற்றும் கொங்கு மக்கள் இயக்கத்தின் சார்பில் 100 பேர் திருமண ஜோடியையும், அவர்களுடைய உறவினர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் இளமதியை கடத்தி சென்றுள்ளனர். தற்போது வரை இளமதி எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவில்லை. பொதுமக்கள் சேர்ந்து காவல்துறையினரிடம் முறையிட்டதால் 18 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். முதலமைச்சர் அதிவிரைவில் இந்த விவகாரத்தில் தலையிட்டு இளமதியை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.

அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரான வண்ணியரசு தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவினை மேற்கொண்டுள்ளார். அதாவது, "தெருக்களில் புணரும் மார்கழி மாதத்து நாய்களை பிரம்பெடுத்து வேலைவெட்டி இல்லாமல் விரட்டி அடிக்கும் பொறுக்கிகளை கிராமங்களில் இன்னமும் பார்க்க முடிகிறது. இந்த பதிவுக்கும் கொளத்தூரில் சாதிமறுப்பு செய்த நிகழ்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.