சென்னையில் கட்டுக்கடங்கா கொரோனா..! இன்று மேலும் 94 பேருக்கு நோய்த் தொற்று..!

சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் 94 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2058 ஆக இருந்தது. குறிப்பாக சென்னையில் இதுவரை 678 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

குறிப்பாக நேற்று சென்னையில் மட்டும் 103 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் அதிக மக்கள் குறைவான இடைவெளியில் வசிப்பதால் கொரோனா வைரஸ் தொற்று பரவுவது அதிகமாக உள்ளது என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.இந்நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 102 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் இன்று 94 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பது சென்னை வாசிகளை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

சென்னையில் குறிப்பாக ராயபுரம், திரு வி க நகர், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் சென்னையில் வாழும் மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பெருமளவு அச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.