6,491 பணியிடங்கள்! குரூப் - 4 தேர்வு தேதி அறிவிப்பு! விண்ணப்பிக்க TNPSC சிறப்பு ஏற்பாடு!

தமிழக அஅளவில் 6 ஆயிரத்து 491 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப் - 4 தேர்வுக்கான ஆன்லைன் மூலம் இன்று முதல் ஜூலை 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


குரூப் - 4 பிரிவில் கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ ஆணை  டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இன்று முதல் ஜூலை 14ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மேலும்  ஜூலை 16-ம் தேதிக்குள் எழுத்துத்தேர்வுக்கான கட்டணத்தை வங்கி அல்லது அஞ்சலகம் மூலம் செலுத்த வேண்டும்.

எழுத்துப்பூர்வ தேர்வு வரும்  செப்டம்பர் 1-ம் தேதி நடைபெறும் எனவும், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்தோருக்கு தேர்வுக்கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

மேலும்  விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பை 21 முதல் 30 வரை டி.என்.பி.எஸ்.சி. நிர்ணயிக்கபட்டுள்ளது. இதில் ஏற்கனவே நடந்த குரூப் 1 தேர்வில் சுமார் 24 கேள்விகள் தவறாக கேட்கபட்டிருந்த சர்ச்சை முடிவுக்கு வராத நிலையில் தற்போது அடுத்த கட்ட நகர்வை டி என் பி எஸ் சி எடுத்துள்ளதும் குறிப்பிடதக்கது.