சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி வரும் திருச்சி சிவா மற்றும் சசிகலா புஷ்பாவின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க இயலாது என்று டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
திருச்சி சிவா - சசிகலா புஷ்பாவின் அந்தரங்க புகைப்படங்கள்..! தாராளமாக மக்கள் பார்க்கலாம்! நீதிமன்றம் கொடுத்த அனுமதி!

சசிகலா புஷ்பா அதிமுக கட்சியில் ராஜ்யசபா எம்பியாக இருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து அந்த கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் தற்போது இணைந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக திருச்சி சிவா மற்றும் சசிகலா புஷ்பாவின் ஒருசில அந்தரங்க புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சசிகலா புஷ்பா இம்மாதிரியான புகைப்படங்கள் என்னுடைய பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தவே பரப்பப்பட்டு வருகிறது. ஒரு சிலர் திட்டமிட்ட உள்நோக்கத்துடன் தான் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இதனை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று சசிகலா புஷ்பா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சமீபகாலமாகவே டெல்லி உயர் நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா தொடர்ந்த இந்த வழக்கு நடைபெற்று வந்தது. தற்போது இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி சஹாய் எண்ட்லா அவர்கள் வெளியிட்டிருக்கிறார். அதாவது மாண்புமிகு நீதிபதி வெளியிட்டுள்ள அந்த தீர்ப்பில், மனுதாரர் சசிகலா புஷ்பாவின் அந்தரங்கம் என்பது எது? மக்கள் பிரதிநிதியாக இருக்கக் கூடியவர் யாரையெல்லாம் சந்திக்கிறார் என்று அறியக் கூடிய உரிமை பொதுமக்களுக்கு உண்டு என்பதை அலசி ஆராய வேண்டிய கட்டாயம் உள்ளது.
மக்களின் பிரதிநிதியாக கருதப்படும் அவர் யாரை சந்திக்கிறார் என்று மக்கள் அறிந்து கொள்வது என்பது நியாயம்தான். தன் கட்சியோடு சம்பந்தப்படாத மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த ஆண் ஒருவருடன் மூடிய கதவுகளுக்குப் பின்னால் சந்தித்து பழகக்கூடியதைப்பற்றி அறிந்து கொள்வதற்கான முழு உரிமையும் பொதுமக்களுக்கு உள்ளது என்று நீதிபதி கூறியிருக்கிறார். இந்த சந்திப்பு பொது நலனுக்காக என்று கூறவும் முடியாது அதே சமயத்தில் பொதுநலனுக்காகத்தான் இந்த சந்திப்பு நிகழ்ந்தது என்றும் சசிகலா தரப்பு வாதிடவும் இல்லை.
ஆகையால் பேஸ்புக், யூட்யூபில் வெளிவந்திருக்கும் புகைப்படங்களை நீக்குவதற்காக தொடரப்பட்ட வழக்கில் இந்த புகைப்படங்களை நீக்கவோ அல்லது பார்ப்பதற்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளையோ விதிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளார். மேலும் புகைப்படத்தை நீக்குவதற்கான உத்தரவையும் ஃபேஸ்புக் , கூகுள் மற்றும் யூட்யூப் ஆகிய நிறுவனத்திற்கு வழங்க முடியாது என்றும் கூறியிருக்கிறார். ஆகையால் இது குறித்து தொடரப்பட்ட சசிகலாவின் வழக்கு நீதிபதிகள் தள்ளுபடி செய்யப்பட்டது மேலும் பேஸ்புக் நிறுவனத்திற்கு இரண்டு லட்சமும் யூடியூப் மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு தலா ஒரு லட்சமும் அபராதம் அளிக்குமாறு சசிகலா புஷ்பா இருக்கு உத்தரவிட்டுள்ளனர்.