பாதம் அழகாக இருக்கிறதா… அதுதான் உண்மையான அழகு தெரியுமா?

முக அழகிற்காக தினமும் இரண்டு மணி நேரம் செலவழிப்பவர்கள், பாதத்தை சிறிதும் கண்டுகொள்வது இல்லை.


அதனால் பாதத்தில் வெடிப்பு விழுந்து, நரம்பு வெளியே தெரிந்து மிகவும் அசிங்கமாக காட்சி தரும்.

ஒருவரது அழகைப் பார்க்கும்போது முகம் முக்கிய பங்கு வகிக்கும் என்றாலும், பாதத்தை எப்படி வைத்திருக்கிறார் என்பதைப் பொறுத்துதான் அவர் உண்மையிலே அழகியா இல்லையா என்பதை ஆண்கள் முடிவு செய்கிறார்கள். அதனால் பாதத்தை எப்படி கவனிக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷ்சினால் சுத்தம் செய்யவும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்துவருவது நல்லது. பிறகு பாதங்களை ஈரம்போக ஒரு மெல்லிய டவலால் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம்.

பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும். பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக 5 நிமிடம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.

கால் விரல்களில் புண், நகச்சுத்தி வந்தால் எலுமிச்சைப்பழத்துடன் மஞ்சள் தேய்த்து பத்துப்போட்டு வந்தால் விரைவில்  நீங்கும். கால் விரல் நகத்தின் ஓரத்தில் மண் நிறைந்து விட்டால் நல்லெண்ணெயை ஒரு விளக்கில் ஏற்றி வைத்து ஒரு தீக்குச்சியை அந்த நல்லெண்ணெயில் வைத்து அந்த விளக்கின் திரியில் சூடு செய்து அந்த விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். 2 அல்லது 3 முறை செய்தபின் அதில் உள்ள அழுக்கு எல்லாம் வந்து விடும்.  நகத்தின் ஓரங்களில் பின் அல்லது ஊசியை வைத்து சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும்