சிவனுக்கு உரிய நாளான மகாசிவராத்திரி நாளில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்தால் ஒருவர் நினைத்த காரியம், ஆசை மற்றும் அவர்களின் கஷ்டங்கள் நீங்கி சுகமுடன் வாழலாம்.
உங்கள் ராசிக்கு ஏற்ற அபிஷேக பொருள் இதுதான். மகா சிவராத்திரியில் அபிஷேகம் செய்தால் இறைவன் அருள் பெறலாம்.

இந்நாளில் சிவபெருமானுக்கு பூஜை செய்வதால் சிவனின் அருள்பார்வையை பெறலாம். அதிலும் எந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தால் சிவனின் அருளை முழுமையாக பெறமுடியும் என தெரிந்துகொண்டு அபிஷேகம் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
மேஷ ராசி - மேஷ ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று வெல்லம் கலந்த நீரை சிவலிங்கத்திற்குப் படைத்து, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தை சொல்ல வேண்டும். இதனால் நினைத்தது அனைத்தும் நடக்கும்.
ரிஷப ராசி - ரிஷப ராசிக்காரர்கள், தயிரைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், வீட்டில் உள்ள பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
மிதுன ராசி - மிதுன ராசிக்காரர்கள், சிவலிங்கத்தை கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் ஆசைகள் நிறைவேறும்.
கடக ராசி - கடக ராசிக்காரர்கள், சர்க்கரை சேர்த்த பால் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, மந்தாரைப் பூவால் அலங்கரித்தால், நினைக்கும் காரியம் கூடிய விரைவில் நடக்கும்.
சிம்ம ராசி - சிம்ம ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று சிவப்பு சந்தனம் கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால், சிவன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்குவார்.
கன்னி ராசி - கன்னி ராசிக்காரர்கள், பால் மற்றும் நீரால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்தால், நல்ல ஆரோக்கியத்தை அருள்வார்.
துலாம் ராசி - துலாம் ராசிக்காரர்கள், பசு மாட்டுப் பாலால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், வாழ்வில் நல்ல செல்வ செழிப்போடு இருக்க அருள்புரிவார்.
விருச்சக ராசி - விருச்சக ராசிக்காரர்கள், தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்வது மிகவும் நல்லது.
தனுசு ராசி - தனுசு ராசிக்காரர்கள், குங்குமப்பூ கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்து, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தைப் படிக்க வேண்டும். இதனால் வாழ்வில் உள்ள இன்னல்கள் நீங்கும்.
மகர ராசி - மகர ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று சிவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, வில்வ பழத்தைப் படைத்தால், வாழ்வில் எதிலும் வெற்றிக் கிட்டச் செய்வார்.
கும்ப ராசி - மகாசிவராத்திரி அன்று கும்ப ராசிக்காரர்கள், இளநீர் அல்லது கடுகு எண்ணெயால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்தால், நிதி ஆதாயம், லாபம் கிடைக்க உதவுவார்.
மீன ராசி - மீன ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று குங்குமப்பூ கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால், செல்வ செழிப்போடு இருக்க வழி வகுக்கும்