திருமணமாகாத பெண்கள் சிவலிங்கத்தை தொடக்கூடாதாம்! ஏன்னு தெரியுமா?

சிவலிங்கம் என்பது சிவன் தியானம் செய்யும் நிலை என்றும் அந்த நிலையில் சிவன் தூய்மையான நிலையில் தியானத்தில் இருப்பதாலும், சிவலிங்கத்தை பெண்கள் அருகே சென்றோ அல்லது கைகளால் தொட்டோ பூஜிக்க கூடாது.


சிவனின் தியானம் கலையாமல் இருக்கவும், இடையூறு ஏற்படாமல் இருக்கவும் அதிகளவில் அக்கறையாக இந்திரர்கள் செயல்படுவார்கள். எனவே கடவுள்களே தியான நிலையில் உள்ள சிவலிங்கத்தை நெருங்கி பூஜிக்க அஞ்சுவதால் தான் குறிப்பாக பெண்கள் சிவலிங்கத்தை பூஜிக்க கூடாது என கூறப்படுகிறது. 

பெண் கடவுள்கள் கூட அவரை தொந்தரவு செய்ய தயங்குவார்கள். சிவலிங்கத்தை ஆண்கள் மட்டுமே பூஜிக்க வேண்டும் என்றும் பெண்கள் பூஜிக்க கூடாது என்றும் இந்துக்களிடையே ஒரு நம்பிக்கை காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. பெண்கள் அதிலும் குறிப்பாக திருமணம் ஆகாத பெண்கள் சிவலிங்கத்தின் அருகே செல்லவே கூடாது எனவும் கூறப்படுகிறது. 

திங்கட்கிழமைதான் சிவனின் தினமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் திருமணமாகாத பெண்கள், விரதம் இருந்து சிவனை போல நல்ல கணவனை பெற வேண்டுமென பூஜிக்கலாம். இந்தியா முழுவதும் ஒரே மாதிரி வழிபாட்டை பின்பற்றப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பிரதேசத்திலும் இடத்திற்கு ஏற்ப சில மாறுதல்களுடன் இவை கடைபிடிக்கப்படுகின்றன.

வீட்டிலேயே சிவலிங்கத்தை வழிபட்டாலும், ஆண்கள் தான் அபிஷேக ஆராதனைகளை செய்ய வேண்டும் என்றும், பெண்கள் ஆண்களுக்கு உதவியாக இருந்து தேவையானவற்றை செய்யலாம். 

ராமேஸ்வரத்தில் சீதா தனது கையால் செய்த சிவன் சிலையை ராமன் வழிபட்டதாக ஒரு கதை உள்ளது. ராமன் காசியில் இருந்து சிவன் சிலை எடுத்துவர அனுமனை அனுப்பியதாகவும், ஆனால் அனுமன் வர தாமதமான நிலையில், அங்குள்ள மண்ணை கொண்டே சீதா லிங்கத்தை செய்ததாகவும் கூறப்படுகிறது.

புராண காலத்தில் இருந்து சிவலிங்கத்தை பெண்கள் வழிபடக்கூடாது என்றும், ஆண்கள் மட்டுமே வழிபட வேண்டும் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் பரவியுள்ளது.