வங்க தேச நாட்டில் அரசின் ஊரடங்கை பொருட்படுத்தாமல் இஸ்லாமிய அமைப்பின் தலைவரின் இறுதி சடங்கில் 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டதால் அந்நாட்டில் மிகுந்த அச்சத்தை உருவாக்கியுள்ளது.
ஊரடங்கையும் மீறி 1 லட்சம் பேர் திரண்ட இறுதிச்சடங்கு..! யாருக்கு தெரியுமா?
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கத்தினால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடைக்கும் சூழ்நிலையில், இந்தியாவின் அண்டை நாடான வங்க தேசத்தில் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதித்து இருந்தது.
ஆனால் அதனை மீறி அந்நாட்டு மக்கள் அந்நாட்டின் முக்கிய கூடியது இஸ்லாமிய அமைப்பின் தலைவர் இறந்ததால், அங்கு நடைபெற்ற இறுதி சடங்கில் 1 லட்சத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டதால் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவாகரம் குறித்து அந்நாட்டின் பிரதம அமைச்சரின் சிறப்பு உதவியாளர், Shah Ali Farhad மற்றும் Brahmanbaria மாவட்ட காவல்துறை செய்தி தொடர்பாளர் Imtiaz Ahmed இதை உறுதி செய்துள்ளனர். மேலும், இஸ்லாமியர்களின் தலைவராக Maulana Zubayer Ahmad Ansari- ன் இறுதி சடங்கு தொழுகைக்கு 5பேருக்கு மேல் வரக்கூடாதென்று அறிவுறுத்திய நிலையில், கட்டுக்கடங்காத மக்கள் வந்து கூடியுள்ளனர்.
இதனை பற்றி Brahmanbaria மாவட்டத்தில் மக்கள், சாலைகளை அதிகளவில் நிரம்பியதால் அதை கட்டுப்படுத்த இயலாத அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்க தேசத்தில் நாட்டில் தற்போது வரை 2,456பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 91பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் இந்த சூழ்நிலையில், இப்படி பட்ட நிகழ்வு நடந்து இருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி பரிசோதனை கருவிகள் குறைப்பாட்டால் குறைந்த அளவில் கணக்கிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்று பொது மக்கள் அரசின் உத்தரவுகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.