நாடாளுமன்றத்தின் மக்களவையில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை மிக எளிதாக அமித்ஷா நிறைவேற்றிவிட்டார்.
எடப்பாடியின் ஆதரவால் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேறியது! இதற்கு அசாம் மட்டும் கடுமையாக எதிர்ப்பது ஏன்?

எடப்பாடி இருக்க கவலை எதற்கு என்பதுதான் மோடியின் பாலிசி. அதனால், கேட்காமலே ஆதரவு கொடுத்து சட்டத்தை நிறைவேற்றி விட்டார்கள். இஸ்லாமியர்களுக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கும் மிகப்பெரிய அநீதியை எடப்பாடி அரசு செய்துவிட்டது, இது ஒரு வரலாற்றுப் பிழை என்று வழக்கத்துக்கு மாறாக கொந்தளித்து இருக்கிறார்.
ஆனால், இதையெல்லாம் ஒரு பொருடாக எடப்பாடி கருதுவதில்லை என்பதுதான் உண்மை. இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு இருந்தாலும், அசாம் மாநிலத்தில் மட்டும் கடுமையாக எதிர்ப்பு காட்டப்படுகிறது. அது, ஏன் தெரியுமா?
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளான இஸ்லாமியரல்லாதவர்கள் இந்தியாவில் குடியேறியிருந்தால், அவர்களை இந்தியக் குடிமக்களாக அங்கீகரிக்க இந்தச் சட்டம் வகை செய்கிறது. ஆனால், இலங்கை, பர்மா ஆகியவற்றில் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களைப் பற்றி சட்டம் ஏதும் சொல்லவில்லை. இந்த காரணத்தால் முக்கிய எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றனர்.
ஆனால், அசாமில் இந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கான காரணமே வேறு. ஆம், 1971ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா _ -பாகிஸ்தான் போர், வங்கதேச விடுதலை போர் ஆகியவற்றின்போது, ஒரு கோடிக்கும் அதிகமான வங்கதேச மக்கள் இந்தியாவின் அசாம், மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறினர்.
காலப்போக்கில் அவர்களுக்கு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் வாக்குரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டன. இந்தக் குடியேறிகளால் தங்களது வேலைவாய்ப்பு, அரசியல், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட உரிமைகள் பாதிக்கப்படுவதாக கூறி அசாமை பூர்விகமாக கொண்டவர்கள், பல்வேறு இயக்கங்களின் கீழ் பல வருடங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து, 1971ம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதிக்கு முன்னதாக அசாமுக்கு வந்தவர்களுக்கு மட்டும் இந்திய குடியுரிமை அளிக்க முடிவு செய்து, 1951ம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று, அதன் இறுதிப் பட்டியலும் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.
இதையடுத்து, சட்டவிரோதமான முறையில் அசாமில் குடியேறிய வங்கதேசத்தவர்கள் வெளியேறுவார்கள் என்று அம்மாநிலத்தவர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் மூலம் வங்கதேசத்திலிருந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை கிடைத்துவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனால்தான், அம்மாநிலத்தில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன..ஆம், யாருக்கும் குடியுரிமை கொடுக்கக்கூடாது என்பதற்காக.வே அசாம் பொங்கி எழுகிறது.
என்னமோ போங்கப்பா...