16வயது மாணவனுடன் காதல்! பிறகு திருமணம்! குழந்தையும் பெற்றெடுத்த 23 வயது ஆசிரியை! எங்கு தெரியுமா?

தன் மாணவனை காதலித்து ஆசிரியர் ஒருவர் குழந்தை பெற்றெடுத்திருக்கும் சம்பவமானது நியூசிலாந்து நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நியூசிலாந்து நாட்டில் பஹியாட்டுவா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தாரருவா என்ற கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக நடாஷா மில்லர் என்ற 23 வயது இளம்பெண் பணியாற்றி வந்தார்.

2006-ஆம் ஆண்டில் பணியாற்றி கொண்டிருந்தபோது அதே கல்லூரியில் படித்து வந்த ஹேடன் மெக்டொனால்ட் என்ற 16 வயது மாணவனுடன் மிகவும் நெருங்கி பழகி வந்தார். நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. இந்த சம்பவமானது நிர்வாகத்தினருக்கு தெரியவந்தது. இதை மில்லர் அறிந்தவுடனே தன்னுடைய பேராசிரியை பணியை ராஜினாமா செய்தார்.

சில ஆண்டுகள் கழித்து ஹேடனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகின்றனர். இத்தம்பதியினருக்கு தற்போது 3 குழந்தைகள் உள்ளனர். மேலும் இருவரும் வேறு ஒரு கல்லூரியில் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த செய்தியானது நியூசிலாந்து நாட்டில் பலரையும் வியக்க வைத்துள்ளது.