பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியருடன் இளம் ஆசிரியை செக்ஸ்! பிறகு நிகழ்ந்த அதிரடி சம்பவம்!

ஒடிசா மாநிலத்தில் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி சக ஆசிரியையை பாலிய பலாத்காரம் செய்ததாக ஆசிரியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


ஜாஜ்பூர் மாவட்டம் சுந்தாரியாவைச் சேர்ந்தவர்  பினோத் பிகாரி சேத்தி. இங்குள்ள உயரிநிலைப்பள்ளி ஒன்றின் ஆசிரியரான இவர் தற்காலிக தலைமை ஆசிரியராகவும் செயல்பட்டு வந்தார். இவர் பள்ளியின் சக ஆசிரியை ஒருவர் பணியாற்றி வந்தார்.

 

தலைமை ஆசிரியர் என்ற அந்தஸ்தை பயன்படுத்தி பிகாரி சேத்தி அந்த இளம் ஆசிரியைக்கு காதல் வலை வீசியுள்ளார். இதனை நம்பி இளம் ஆசிரியை காதல் வலையில் வீழ்ந்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து அவ்வப்போது ஆசிரியையை தனது இச்சைக்கு பயன்படுத்தியுள்ளார். பள்ளி வளாகத்திலேயே ஆசிரியையுடன் உல்லாசமாக இருப்பதை தலைமை ஆசிரியர் பழக்கமாக கொண்டுள்ளார்.

 

திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியையுடன் தலைமை ஆசிரியர் பாலியல் உறவு கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பினோத்திடம் உறுதியளித்தபடி திருமணம் செய்துகொள்ளுமாறு ஆசிரியை வலியுறுத்திய நிலையில் வாக்குவாதம் முற்றியதையடுத்து ஆத்திரம் அடைந்த பினோத் ஆசிரியை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

 

உதவி கோரி ஆசிரியை கதறியதையடுத்து சக ஆசிரியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.சிகிச்சை முடிந்து அன்றைய தினமே ஆசிரியை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பினோத் பிகாரி சேத்தியை போலீசார் கைது செய்தனர் .

 

அதே சமயம் பள்ளி வாளகத்திலேயே தலைமை ஆசிரியருடன் செக்ஸ் வைத்துக் கொண்டதாக எழுந்த புகாரில் ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.