அய்யா என் 89 வயது தாய்க்கு மருத்துவ உதவி தேவை..! ஒரே ஒரு ட்வீட் போட்ட ராணுவ வீரன்! வீட்டுக்கே அதிகாரிகளை அனுப்பிய எடப்பாடியார்..! நெகிழ வைத்த நிகழ்வு!

89 வயது தாய்க்கு மருத்துவ உதவி தேவை என்று முதலமைச்சர் ட்விட்டர் பகுதியில் ராணுவ வீரர் ஒருவர் ட்வீட் போட்ட பதிவுக்கு அடுத்த சில மணி நேரங்களில் உதவிய தமிழக முதலமைச்சர். தமிழக அரசின் நடவடிக்கையினால் நெழிந்த ராணுவ வீரர்.


கொரோனா தொற்றின் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தமிழகத்திலும் ஊராடங்கு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அத்தியவசிய பொருட்கள் வாங்கு வதற்கு மட்டும் வெளியே வரவேண்டும் என்ற சூழ்நிலையில் உருவாகி உள்ளது.

இந்நிலையில், ஏழை மக்கள் உணவும், மருந்தும் கிடைக்காமல் தவித்துவருகின்றனர். இவர்களின் தேவைகளை அறிந்து அரசுடன் பல சமூக ஆர்வலர்கள் இணைந்து உதவி வருகின்றனர். இதற்கிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன் ட்விட்டர் பக்கத்தினை சமூக வளைதளம் போல் பயன்படுத்தாமல், புகார் அளிக்கும் ஒரு கருவியாக பயன்படுத்தி மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

அதன் விளைவாக மக்கள் தங்களின் குறைகளை, அவர் ட்விட்டர் பக்கத்தில் உதவி கோரி யார் பதிவு போட்டாலும், உடனடியாக அவர்களது பதிவை டேக் செய்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வழிசெய்கிறார்.

தமிழக முதலமைச்சரின் இந்த நடவடிக்கையினால் மக்கள் கவனம் ஈர்த்து வருகிறார். இதற்கிடையே, இரண்டு நாள்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தடுப்பு, நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் முதல்வர் எடப்பாடி. அந்த பதிவு மக்களிடையே மிகுந்த பாராட்டை பெற்று வருகிறது.

 அதன் தொடர்ச்சியாக, நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த மத்திய பாதுகாப்புப் படை வீரர் ரவிக்குமார் என்பவர் முதலமைச்சர் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஈட்டுள்ளார். அதில், ``ஐயா நான் மத்திய பாதுகாப்புப் படையில் அகமதாபாத்தில் பணியில் உள்ளேன். எனது தாயாருக்கு 89 வயது. வீட்டில் தனியாக உள்ளார். அவருக்கு உடல்நிலை சரியில்லை எனக்கு தந்தையும் இல்லை; சகோதரனும் இல்லை எனது தாயாருக்கு மருத்துவ உதவி தேவை" என்று பதிவிட்டிருந்தார்.

 அந்த பதிவை கண்ட தமிழக முதலமைச்சர் அவர்கள், ராணுவ வீரர் பதிவிட்ட சில மணி நேரங்களில் ட்விட்டரில் ரவிக்குமாரை டேக் செய்து, ``தங்கள் தாயாருக்குத் தேவையான மருந்துகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மேலும், அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில் காய்ச்சலோ, இருமலோ, மூச்சுத்திணறல் உள்ளிட்ட எந்த பிரச்னையும் இல்லை என்றும் தாய் நலமாக உள்ளார் அதனால் நீங்கள் தைரியமாக நிம்மதியாக இருங்கள்!" என்று அவரது தாய்க்கு உதவிய புகைப்படத்தையும் சேர்த்து அதில் பதிவிட்டுள்ளார்.

இதனை கண்ட ராணுவ வீரர் மகிழ்ச்சியில், ”மிக்க நன்றி ஐயா.... நான் எதிர்பாராத உதவியும்.. ஆதரவும்....அளித்த முதல்வருக்கு நன்றி என்ற வார்த்தை மட்டும் போதாது.... என் கண்ணீரை காணிக்கை ஆக்குகிறேன்.... Jaihind” என்று உருக்கத்துடன் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த பதிவிற்கு பலர் பாராட்டும் ஆதரவும் தெரிவித்த வண்ணம் உள்ளார்.