பார்வையற்றோர் பள்ளிக் கூடத்திற்குள் சிகரெட்டை ஊதித்தள்ளிய தளபதி 64 படக்குழு! சட்டத்தை மீறியதாக அடுத்த புகார்!

பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் தளபதி 64 படக்குழுவினர் புகைபிடித்ததால் புகையிலை பயன்படுத்துவோரை மானிட்டர் செய்யும் செயலின் மூலம் திரைப்பட குழுவினரின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.


தளபதி விஜய் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படமான திரைப்படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் தளபதி விஜயின் 64 வது திரைப்படமாகும். ஆகையால் அனைவரும் தளபதி 64 என்று அழைத்து வருகின்றனர். விஜய் ஹீரோவாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். 

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த திரைப்படத்தின் குழுவினரின் மீது புகார் ஒன்று எழுந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது திரைப்படக்குழுவினர் பார்வையற்ற குழந்தைகள் படிக்கும் பள்ளி வளாகத்திற்குள் புகை பிடித்தது கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

பொது இடங்களில் புகைபிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்று கோட்டா (சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டம்) இன் பிரிவு 4 கூறுகிறது. மறுபுறம், பிரிவு 6 (ஆ) எந்தவொரு கல்வி நிறுவனத்தின் 100 மீட்டர் தொலைவில் சிகரெட் அல்லது வேறு எந்த புகையிலை பொருட்களையும் விற்பனை செய்வது அல்லது பயன்படுத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். 

எண்ணற்ற மாற்றுத் திறனாளி குழந்தைகள் படிக்கும் ஒரு பள்ளியில் ஒரு முன்னணி நடிகரின் படக்குழுவினர் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளது என்பது சமுதாயத்தின் மீது அவர்களின் அக்கறையற்ற செயலை காட்டுகிறது. புகையிலை பயன்பாட்டை உறுதிசெய்த புகையிலை மானிட்டர் செயலி தற்போது விஜய் திரைப்பட குழுவினர் மீது புகார் அளித்துள்ளது . அதுமட்டுமில்லாமல் இவர்களுக்கு படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி அளித்த மேலாளரை விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இனிமேல் பள்ளி வளாகத்திற்குள் படப்பிடிப்பிற்கு அனுமதிக்கக் கூடாது எனவும் மேலும் பள்ளி வளாகத்தினுள் புகை பிடிப்பதற்கு அனுமதி இல்லை என்ற பதாகைகள் வைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தளபதி 64 திரைப்பட குழுவினரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.