திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய சம்பவமானது அசோக்நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்டிப்பா கல்யாணம் கட்டிப்பேன்..! நம்பி ஒத்துழைத்த 17 வயது பெண்! தற்போது 6 மாத கர்ப்பம்! சென்னையில் பகீர் சம்பவம்!
தென்சென்னையில் மிகவும் விறுவிறுப்பான இடங்களுள் ஒன்று அசோக்நகர். அசோக் நகருக்கு உட்பட்ட அம்பேத்கர் சாலை எனுமிடத்திற்கு அருகே பிரசாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது நிரம்பிய இளம் பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் பல இடங்களுக்கு உல்லாசமாக சுற்றித்திரிந்துள்ளனர். இதனால் அந்த மாணவி 6 மாத கர்ப்பமடைந்துள்ளார். இந்த விவகாரம் தெரிய வந்தவுடன் பெண்ணின் பெற்றோர் அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி தற்போது பிரசாந்த் கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவமானது அசோக்நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.