ஐஐடி கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிய போய்ட்டு வர்றதுக்குள்ள இப்டி பண்ணிட்டியே பாத்திமா? கதறும் தோழிகள்! சென்னை ஐஐடி பரபரப்பு!
சென்னை கிண்டியில் ஐஐடி கல்லூரி இயங்கி வருகிறது இந்த கல்லூரியில் ஹ்யுமாணிடீஸ் (Humanities) பிரிவில் பாத்திமா லத்தீப் என்ற மாணவி எம்.ஏ பட்டம் படித்து வந்தார். கல்லூரியில் சென்ற வாரம் நடந்த இன்டர்ணல் தேர்வில் பாத்திமா மதிப்பெண் குறைவாக எடுத்திருந்தார். இதனால் அவர் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். பாத்திமாவின் தாயாரான சஜிதா நேற்றிரவு முதல் அவருக்கு கால் செய்ய முயற்சித்துள்ளார்.
ஆனால் பாத்திமா எடுக்கவில்லை. இதனால் பதறிப்போன சஜிதா, பாத்திமாவின் தோழி ஒருவரை தொடர்பு கொண்டு அவரைப்பற்றி கேட்டுள்ளார். உடனடியாக பாத்திமாவின் தோழியர் அவருடைய அறைக்கு சென்றுள்ளனர். ஆனால் பாத்திமா கதவை திறக்கவில்லை. இதனால் பதறிப்போன தோழியர் விடுதி நிர்வாகத்தினரிடம் புகார் அளித்துள்ளனர்.
விடுதி நிர்வாகத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பாத்திமா தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். இதனால் பதறிப்போன கல்லூரி நிர்வாகத்தினர் அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பாத்திமாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு குறித்து விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்திருந்ததால் பாத்திமா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கருதுகின்றனர்.
இந்த சம்பவமானது ஐ.ஐ.டி கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.