' வைகுண்டம்" என்பது மேலோகத்தில் தான் உண்டு.
சூரிய தோஷம் நீங்க வேண்டுமா? இந்த பூலோக வைகுண்டத்திற்கு சென்றால் போதும்!

பூலோகத்தில் எது என்று நினைப்பவர்களுக்கு கண் கொள்ளாக்காட்சியாக இருப்பது திருநெல்வேலிக்கு மிக அருகில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் எனும் திருத்தலம். புண்ணியம் செய்தவர்களும் சரி, பாவம் செய்தவர்களும் சரி தங்கள் நிலையை முற்றிலும் மறந்து பகவானை நோக்கி காலெடுத்து வைத்தால் போதும். பாவம் கரைந்து போகும். பகவானது அருளும் கிடைக்கும்.
வைகுண்டநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. இத்தலம் நவதிருப்பதிகளில் ஒன்றாகவும் உள்ளது. 12 ஆழ்வார்களால் பாடப்பெற்ற நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகக் கருதப்படும் இத்தலம், நவக்கிரகங்களில் சூரியனுக்குரியது
பிரம்மதேவனிடமிருந்து அசுரன் சோமுகன் வேதங்களைத் திருடிச் சென்றுவிட பிரம்மா விஷ்ணுவிடம் உதவி வேண்டுகிறார். தாமிரபரணிக்கரையில் உள்ள கலச தீர்த்தத்தில் நீராடி வைகுண்டத்திலுள்ள நாராயணனை நோக்கி அவர் தவம் புரிய நாராயணனும் வேதங்களை மீட்டு அவருக்கு உதவும் பொருட்டு அதே தலத்தில் வைகுண்டநாதராய் எழுந்தருளினார் என்கிறது இக்கோயிலின் தல புராணம்.
ஸ்ரீவைகுண்டம் நகரில் திருட்டுத் தொழில் செய்துவந்த காலதூஷகன் என்ற திருடன், வைகுண்டநாதரை வழிபட்டுப் பின் தனது தொழிலைத் தொடங்குவதை வழக்கமாய்க் கொண்டிருந்தான். கிடைத்த பொருளில் பாதியைப் பெருமாளுக்கு காணிக்கையாகச் செலுத்திவிட்டு மீதியைத் தன் தோழர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் தானம் செய்து வந்தான்.
ஒருமுறை அரண்மனைக்குத் திருடச் சென்றபோது இவனுடன் சென்றவர்கள் மாட்டிக்கொள்ள இவன் மட்டும் தப்பிவிட்டான். அரசன் இவனைப் பிடித்துவர காவலாளிகளை அனுப்பினான். காலதூஷகன் வைகுண்டநாதரிடம் வேண்ட அவனுக்காகப் பெருமாள், காலதூஷகன் உருவில் அரசவைக்குச் சென்றார். அரசனிடம், அவன் குடிமக்களைச் சரிவர காக்கத் தவறியதை உணர்த்தி, அரசனுக்கும் காலதூஷகனுக்கும் காட்சிதந்து அருளினார். திருடனாக வந்தமையால் பெருமாள் இங்கு கள்ளபிரான் என்றும் சோரநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
9 நிலைகளும்,110 அடி உயரமும் கொண்டுள்ளது ராஜகோபுரம். மூலவர் வைகுண்டநாதர், சந்திர விமானத்தின் கீழ், ஆதிஷேசன் குடை பிடிக்க, நான் கு கரங்களுடன், மார்பில் மாகாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சித் தருகிரார். உற்சவர் சோரநாதர் (கள்ளபிரான்) பூ தேவி, ஸ்ரீதேவியுடன் காட்சித் தருகிறார். இரண்டு தாயார்களுக்கும் தனித்தனி சன்னிதிகளும், நரசிம்மர் சன்னிதி, கோதண்டர் சன்னிதியும் உள்ளது.
இங்குள்ள திருவேங்கடமுடையான் சந்நிதியில் நாயக்கர் காலத்து அற்புதமான சிற்பங்கள் உள்ளன.சித்திரை, ஐப்பசி மாதங்களில் 6ஆம் நாளன்று சூரியஒளி வைகுண்டநாதர் மீது விழுகிறது. அதற்கு ஏற்றாற் போல கொடிமரம் சற்றே விலகி உள்ளது.ஆங்கிலேயருக்கு எதிராகக் கட்டபொம்மன் நடத்திய விடுதலைப் போரில் இக்கோயில் கோட்டையாகப் பயன்படுத்தப் பட்டது.
இங்கு நடைபெறும் திருவிழாக்களுள் முக்கியமானது கருடசேவைத் திருவிழா ஆகும்..இவ்விழா, தமிழ் மாதமான வைகாசியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.விழாவில் னவ திருப்பதிகளிலும் உள்ள 9 உற்சவப் பெருமாளும் கருட வாகனத்தில் எழுந்தருளுவதைப் பார்க்கலாம்.நம்மாழ்வாரின் உருவச் சிலை அன்ன வாகனத்தில் ஒவ்வொரு நவத்திருப்பதிக்கும் எடுத்துச் செல்லபப்ட்டு அந்தந்த தலங்களில், அந்தந்தத் தலங்கள் குறித்து அவர் பாடிய பாடல்கள் பாடப்படும்.
ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக இங்கு வேண்டிக் கொள்ளலாம்.