ஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு மாதம் தலா 7500 ரூபாய்..! மோடி எடுக்கப்போகும் முடிவு?

ஊரடங்கால் இந்தியாவே பாதிக்கப்பட்டுள்ளதால் ஏழைக்குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் மாதம் தலா ரூ.7500 என ஆறு மாதங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் மோடி என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இது தொடர்பாக சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த புலம்பெயர் தொழிலாளர்கள், மீண்டும் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப கடும் அவஸ்தைகளை அனுபவித்து வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கால்நடையாகவும், சைக்கிளிலும், லாரிகளிலும், வழியில் கிடைத்த வாகனங்களிலும் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். அவர்களில் பலரும் வழியில் விபத்துக்களை சந்தித்து உயிரிழக்கும் கொடுமைகள் வேறு அரங்கேறுகின்றன.

இந்நிலையில், பசி, பட்டினியுடன், கொளுத்தும் வெயிலில், காலணி கூட இல்லாமல் நடந்தே செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களின் அபாயக்குர​ல் மத்திய பா.ஜ.க. அரசின் காதில் கேட்கவில்லையா? என காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த 6 மாதங்களுக்கு ஏழை குடும்பங்களுக்கு மாதம் 7, 500 ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள சோனியா காந்தி, முதல் கட்டமாக பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என பா.ஜ.க. அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.  

மேலும் நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக திடீரென வேலையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச மற்றும் பாதுகாப்பான பயணத்தை அவர்களது இல்லம் சேர உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு சோனியா காந்தி அந்த அறிக்கையில் கூறியுள்ளார். இது குறித்து மோடி என்ன முடிவு எடுக்கப்போகிறார் என பார்க்கலாம்.