வாட்ஸ்ஆப் வீடியோ காலில் விபச்சாரம்! Gpay - PayTmல் பேமென்ட்..! சென்னையில் பாலியல் தொழில் படு ஜோர்..!

தொடர்ந்து நிலவி வரும் பொது முடக்கத்தினால் வாட்ஸ்அப் மற்றும் ஜும் போன்ற வீடியோ கால்களை பயன்படுத்தி பலரும் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள அரசாங்கம் பொது முடக்கத்தை அறிவித்துள்ளது. இதன் காரணமாக பலரும் தங்களுடைய அன்றாட வேலைகளை இழந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த வகையில் பாலியல் தொழில் செய்யும் பெண்களும் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது நிலவி வரும் இந்த தருணத்தில் ஒருவருக்கு ஒருவர் கை குலுக்குவது கூட கூடாது என்று இருக்கும் பட்சத்தில் பாலியல் தொழில் மேற்கொள்வது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். 

ஆகையால் பாலியல் தொழிலில் ஈடுபடும் பல பெண்கள் புதுவிதமான யோசனையில் களமிறங்கியுள்ளனர். இந்த யோசனையின் மூலமாக அவர்கள் எதிர்பார்த்த அளவு பணத்தை ஈட்ட இயலவில்லை என்றாலும் போதுமான அளவு அவர்களால் சம்பாதிக்க இயலும் என்று கூறுகின்றனர் பாலியல் தொழில் செய்யும் பெண்கள். அப்படியாக ஒரு பாலியல் தொழில் செய்யும் பெண்மணி தான் லட்சுமி என்பவர் ஆவார். இவர் தினம்தோறும் இரவு நேரத்தில் தன்னுடைய குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு மேக்கப் அணிந்து கொண்டு தன்னுடைய வீட்டு மாடிக்கு சென்று விடுவாராம்.

அங்கு செல்லும் அவர் தன்னுடைய வாடிக்கையாளர்களிடம் வாட்ஸ்அப் அல்லது ஜூம் செயலிகளை பயன்படுத்தி வீடியோ காலில் இணைவாராம். இந்த வீடியோ காலின் வாயிலாக லட்சுமி எப்பொழுதும் தன்னுடைய வாடிக்கையாளர்களிடம் பாலியல் செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இந்த வீடியோக்களை பார்த்து திருப்தி அடையும் வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு பணத்தை பணம் பரிவர்த்தனை செய்யக்கூடிய செயலிகளை பயன்படுத்தி செய்வதாக கூறப்படுகிறது. அதாவது Gpay மற்றும் PayTm போன்றவற்றை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்துவார்கள் என்று கூறுகிறார்கள்.

அதாவது மொபைல் போன்கள் மற்றும் இணைய வசதிகள் உள்ள பாலியல் தொழிலை மேற்கொள்ளும் பெண்கள் தற்போது இந்த முயற்சியை கையாண்டு உள்ளனர் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் அவர்களால் முன்பு பெற்ற அளவிற்கு சம்பாதிக்க இயலவில்லை என்றாலும் எதுவுமே கிடைக்காததற்கு இது ஏதோ பரவாயில்லை என்று கூறுகின்றனர் ஒரு சில பாலியல் தொழிலை மேற்கொள்ளும் பெண்கள். அதேபோல் ஆன்லைனில் ஏராளமான செக்ஸ்படங்கள் இருக்கும்போது எதற்காக இவர்கள் பாலியல் பெண்களிடம் ஆன்லைனில் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள்? என்ற கேள்வி நம்மில் பலரிடம் எழுகிறது.. அதாவது ஒரு சிலர் தங்களுடைய இசைக்களை பேசுவதற்காக ஒரு நபரை தேடுகின்றனர். அப்படியாக ஆறுதல் அளிப்பவர்கள் தான் பாலியல் தொழில் செய்யும் பெண்கள். 

இம்மாதிரியான வேலைகளுக்கு அவர்கள் வேறு விதமான கட்டணங்களும் வசூலிப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் நேரத்திற்கு தகுந்த மாதிரி கட்டணங்களும் உயரும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். தற்போது இம்மாதிரியான பாலியல் தொழில்கள் சென்னையிலும் படுஜோராக நடைபெறுவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.