ஐஸ்வர்யா அக்கா தூக்குல தொங்கி துடிக்குறாங்க..! அலறிய தம்பி! பதறிய தூத்துக்குடி!

பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் பூரணசெல்வி. இத்தம்பதியினருக்கு ஐஸ்வர்யா என்ற 16 வயது மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவ்விருவரும் அதே பகுதியை சேர்ந்த அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

இதனிடையே ஐஸ்வர்யா சில நாட்களுக்கு முன்னர், 2 நாட்கள் விடுப்பு எடுத்துள்ளார். அதன் பின்னர் பள்ளிக்கு சென்றபோது, அவருடைய கணினி அறிவியல் ஆசிரியரான ஞானப்பிரகாசம் என்பவர் ஐஸ்வர்யாவை கடுமையாக திட்டியுள்ளார். மேலும் சக நண்பர்களின் மத்தியில் தோப்புக்கரணம் போடவும் வைத்துள்ளார்.

இதனால் ஐஸ்வர்யா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். பள்ளியில் சிறப்பு தேர்வு நடைபெற்ற போதும் அவர் பள்ளிக்கு செல்லவில்லை. இதுகுறித்து பெற்றோர் அவரிடம் விசாரித்த போது, பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை என்று கூறியுள்ளார். பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றுவிட்ட பின்னர், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் ஐஸ்வர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பள்ளி முடித்து விட்டு வீடு திரும்பிய ஐஸ்வர்யாவின் தம்பி, அக்கா தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஐஸ்வர்யாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஐஸ்வர்யாவின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

சொந்த மகள் தூக்கில் தொங்கி உயிரிழந்திருப்பதை கண்ட பெற்றோர் மருத்துவமனையில் கதறி அழுதனர். இந்த சம்பவமானது தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.