உத்தரவை மீறி புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டு இருந்தால் மாநாகராட்சி நிர்வாக அதிகாரிகள் சரவணா ஸ்டோர்ஸ் அலுவலகத்துக்கு சீல் வைத்து கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
சென்னையில் இழுத்து மூடப்பட்ட சரவணா ஸ்டோர்ஸ்..! அதிர்ச்சி காரணம்!
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் உலக நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்தியாவில் கொரோனா வைரஸால் 139 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிகைகள் எடுத்து வருகின்றது.
இந்நிலையில், தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிகைகள் எடுத்து வருகின்றது. அதில் ஒரு பகுதியாக அனைத்து கடைகளும் தமிழகத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பார்கள், கிளப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. உத்தரவை மீறி திறந்தால் சீல் வைக்கப்படும் என்றும் மாநாகராட்சி நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
தமிழகத்தில் அனைவரும் உத்தரவை பின்பற்றும் நிலையில், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர் வணிக வளாகம் நேற்று தடையை மீறி திறக்கப்பட்டது. அதன்பின் மாநாகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளின் எச்சரிக்கை விடுத்தனர், பின்னர் வணிக வளாகம் பிற்பகல் 2 மணியளவில் மூடப்பட்டது.
இதனையடுத்து மலை 4 மணியளவில் சரவணா ஸ்டோர்ஸ் மீண்டும் திறக்கப்பட்டது. இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி அதிகாரிகள் உடனே சரவணா ஸ்டோர் வணிக வளாகத்திற்கு சீல் வைத்தனர். இந்த கடும் நடவடிக்கையால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.