சாம்சங் மொபைல் தன்னுடைய அடுத்த அறிமுகமாக, கேலக்ஸி ஏ8எஸ் விரைவில் வெளியிட உள்ளது. இந்த செல்போனின் சிறப்பு அம்சம் என்னவென்றால், 6.39 இன்ச் புல் HD பிளஸ் இன்பினிட்டி வோர்டு டிஸ்பிளே.
மூன்று கேமராவுடன் வரும் சாம்சங் மொபைல் வாங்க ரெடியா?
FCC சான்றுடன் வெளியாகும் சாம்ஸ்சங் கேலக்ஸி A8Sல் ஏராளமான புதுப்புது அம்சங்கள் உள்ளன. அதாவது ஆப்பிள் கைபேசியில் உள்ள மாதிரி ஃபுல் ஸ்கிரீன் டிஸ்பிளே. மேலும் இதில் ஸ்னேப் டிராகன் 710 ப்ராஸசர் உள்ளது. அட்டினிரோ 616 ஜிபி. 6ஜிபி ராம், 120 ஜிபி உள்ளடங்கிய நினைவகம் (120 GB inbuilt memory) 512 GB வரைக்கும் எக்ஸ்டெண்ட் பண்ணிக்கலாம். இத்தனை அம்சங்களுடன் இதுவரைக்கும் ஓரியோ 8 தான் இருக்கு. இந்த மொபைல் மட்டும் முதன்முதலில் குறிப்பாக ஆண்ட்ராய்டு 95 உடன் சிறப்பாக வரவிருக்கிறது. இதுவரைக்கும் ஆண்ட்ராய்டு 95 வரவில்லை. இது 3400 MAH பேட்டரி திறன் கொண்டது. ஆதலால் இரண்டு நாட்கள் வரை ரிசார்ஜ் நிலைக்கும்.
மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால்,
இந்த மொபைல் மூன்று பின் கேமராவுடன் (rear camera) வருகிறது. இதற்கு முன் சாம்ஸ்சங் கேலக்ஸி A7 மூன்று கேமராவுடன்
வந்துள்ளது. அதன் பின் A9 நான்கு கேமராவுடன்
வரவிருக்கிறது. இந்த A8s சாம்ஸ்சங் மொபைல்
3 கேமராவுடன் வரவிருக்கிறது. ஒன்று 24 மெகா
பிக்ஸல் கேமரா, இன்னொன்று 5 மெகா பிக்ஸல் கேமரா, அதுக்கடுத்தது 10 மெகா பிக்ஸல் கேமரா. 3.5 ஜாக் இல்லாமல் வெளிவரும் முதல் மொபைல் இதுதான். இது 2019 ஆம் ஆண்டின் மத்தியில் வெளிவரும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடைய விலை ரூபாய்
45,000-ல் இருந்து 50000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.