அதுல்யாவும், வைபவியும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தங்க.! 74 வயசுல விஜய் அப்பா பேசுற பேச்ச பாருங்க..!

புரட்சி இயக்குனர் என்றழைக்கப்படும் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் கேப்மாரி என்ற திரைப்படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வர உள்ளது.


எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் 70வது திரைப்படமான இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ஜெய், நாயகிகளாக அதுல்யா மற்றும் வைபவி ஆகியோர் நடித்துள்ளனர். 

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர், ஐந்து வருட ஆய்வுக்கு பிறகு இளைஞர்களுக்கான இந்த திரைப்படத்தை நான் இயக்க தொடங்கினேன். தியேட்டருக்கு வருபவர்களில் 80 சதவீதம் இளைஞர்கள் தான். எனவே நான் இளைஞர்களுக்காக ஒரு திரைப்படத்தை எடுக்க விரும்பினேன்.

ரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதா போல இந்தக் கால இளைஞர்கள் எல்லை மீறி ஆடுகிறார்கள். இளைஞர்கள் எல்லை மீறும் போது ஏற்படும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டே இதை திரைப் படத்தை நான் இயக்கி உள்ளேன். வாழ்க்கையை மிகவும் ஜாலியாக எடுத்துக் கொண்டு எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் ஹீரோவாக ஜெய் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

அதுல்யா மற்றும் வைபவி படத்திற்காக நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். மூவரையும் வேலை வாங்கியது எனக்கு மிகவும் எளிமையாக இருந்தது எனவும் படத்தின் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் கூறியுள்ளார். இவ்வாறு உருவான திரைப்படம் தான் கேப்மாரி எனவும் அவர் கூறியுள்ளார்.