சபரி மலை செல்பவர்கள் விரதமிருக்கும் போது கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை..?

ஐயப்பன் விரதம் இருக்க வேண்டியவர்கள் சில நியமனங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.


  1. சபரிமலை செல்பவர் ஒரு மண்டல காலம் (41 நாட்கள்) விரதமிருக்க வேண்டும்.
  2. விரத நாட்களில் இரு வேளைகள் குளிர்ந்த நீரில் நீராட வேண்டும். உடனே வெறும் வயிற்றில் 108 ஐயப்பன் சரணம் கூறவேண்டும்.
  3. கருப்பு, நீலம், காவி இவற்றில் ஏதேனும் ஒரு கலரில் வேஷ்டி, சட்டை, துண்டு அணியவேண்டும்.
  4. உடல், உள்ளம் சுத்தமாக வேண்டும்.
  5. கார்த்திகை முதல் நாள் பெற்றோரை வணங்கி அவர்களின் அனுமதி பெற்றபின் குருசாமியின் கரங்களால் மாலை அணிந்து கொள்ள வேண்டும். பெற்றோர் மூலமும் மாலை அணியலாம்.
  6. பகலில் தூங்கக்கூடாது. மெத்தை, தலையணையின்றி வெறும் தரையில் மேல் ஆடையை விரித்து கையை தலைக்கு வைக்து தூங்கவேண்டும்.
  7. சைவ உணவே எடுத்துக்கொள்ள வேண்டும். தாடி வளர்க்க வேண்டும். செருப்பு அணியக்கூடாது.
  8. பிரம்மசரியம் கடைபிடிக்க வேண்டும். மது, சிகரெட், போதை அறவே கூடாது.
  9. இறந்தவர் வீட்டுக்குப் போகக் கூடாது. இறந்தவர் நெருங்கிய உறவினராக இருந்தால் சபரிமலை யாத்திரை செல்லக்கூடாது.
  10. ஐயப்ப பக்தர்களை ஐயப்பசாமி என்றே அழைக்க வேண்டும்.
  11. தீய வார்த்தைகள், தீய பழக்கம், தீய நட்பு, தீய செயல் செய்யக்கூடாது.
  12. மாதவிலக்கான பெண்களைக் கண்டால் உடன் குளிக்க வேண்டும்.

இப்படி கடுமையான விரதத்தைக் கடைபிடித்து சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்து வந்தால் உடலும் உள்ளமும் உறுதியும், ஆரோக்கியமும் அடையும். தேஜஸ் உண்டாகும். மனம் தூய்மை அடையும். நோய்கள் அண்டாது. ஆரோக்கியமான வாழ்வு பெறலாம்.