சிறுமிகளை கற்பழிக்க முயன்றவரின் மர்ம உறுப்பை குதறிய நாய்க்கு குவியும் பாராட்டு!

அமெரிக்காவில் வீட்டில் தனியாக இருந்த இரண்டு சிறுமிகளை கற்பழிக்க முயன்ற முதியவர் ஒருவரின் ஆணுறுப்பை அந்த சிறுமிகள் வளர்க்கும் நாய் ஒன்று கடித்துக் குதறி அவர்களை காப்பாற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவின் அர்கானஸ் மகாணானத்தை சேர்ந்தவர் ரான்டால் ஜேம்ஸ். அதே பகுதியில் டேவிட் என்பவர் மனைவி , 3 வயது மற்றும் 6 வயது மகள்களுடன் வசித்து வந்தார். கணவன்-மனைவி இருவரம் வேலைக்குச் சென்றுவிட்டனர்.

இந்த இரண்டு சிறுமிகளும் பள்ளிக்ச் சென்றுவிட்டு வீட்டுக்குள் தங்கள் பாடங்களை படித்துக் கொண்டிருந்தனர்.  அப்போது ரான்டால் ஜேம்ஸ் அந்த வீட்டின் ஜன்னல் வழியாக குதித்து வீட்டுக்குள் வந்தார்.

பின்னர் அந்த  3 வயது மற்றும் 6 வயது சிறுமிகளை ரான்டால் ஜேம்ஸ் கற்பழிக்க முயன்றார். இதனையடுத்து அந்த 68 வயது முதியவரிடம்  இருந்து தப்பிப்பதற்காக குழந்டிதகள் இருவ்ரும் கத்தி கூச்சலிட்டனர். இதனை பார்த்த அவர்களது வளர்ப்பு நாய், அந்த முதியவரின் மேல் பாய்ந்து கடித்து குதறியது.

மேலும் அந்த முதியவரின் மர்ம உறுப்பையும் கடித்ததோடு மட்டும்அல்லாமல் அதனை விழுங்கியும் விட்டது. மர்ம உறுப்பை இழந்து ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த முதியவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 2 சிறுமிகளை முதியவரின் பலாத்கார முயற்சியில் இருந்து அவர்களது வளர்ப்பு நாய் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது