மகாலட்சுமியை எப்படி ஆவாஹனம் செய்யவேண்டும் தெரியுமா? ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும் அதிசயம்

நிலத்தில் கிடைக்கும் ரத்தினங்கள் பலவகையாக பல நிறங்களில் இருக்கின்றன.


இவற்றில் ஒன்பதை தேர்ந்தெடுத்து நவரத்தினம் என்று அழைக்கிறோம். இவை மாணிக்கம், பவளம், முத்து, மரகதம், புஷ்பராகம், வைரம், வைடூரியம், கோமேதகம், நீலம் என்பனவாகும் இவை ஒன்பதும் தெய்வீகத் தன்மை கொண்டவைகளாக போற்றப்படுகின்றன. இவற்றிற்கு அதிதேவதைகளாக நவகிரகங்களைச் சொல்லுகின்றனர்.

நவரத்தினங்களோடு ஸ்படிகம், புனித நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்கள், கைலாயம் போன்ற மலைகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்கள் ஆகியவற்றை ஒரு வெள்ளிச் சொம்பில் நிறைத்து வழிபடுவர். இதற்கு ரத்தின கலசம் என்று பெயர். மகாலட்சுமியை இந்தக் கலசத்தில் ஆவாஹனம் செய்து வழிபட்டால் அதன் பலன் ஆயிரம் மடங்கு இருக்கும் என்பது நம்பிக்கை.

மகாலட்சுமி, சுவர்ண பைரவர் முதலிய தெய்வங்கள் கரத்தில் ரத்தின கலசத்தைத் தாங்கியுள்ளனர்.  விநாயகர் தன் துதிக்கையில் ரத்தின கலசம் ஏந்தி உள்ளதாக சிற்ப நூல்கள் கூறுகின்றன.

வரலட்சுமி விரத பூஜையின் போது ரத்தினக் கலசம் வைத்து பூஜை செய்வார்கள்.