வானில் பிறை தெரிந்தது! தமிழகத்தில் இன்று ரம்ஜான்! முஸ்லீம்கள் உற்சாகம்!

வானில் பிறை தெரிந்ததால் தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.


புனித ரமலான் மாதம் தொடங்கி இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர். இந்த காலங்களில் அதிகாலைத் தொழுகையில் தொடங்கி மாலை தொழுகை வரை உண்ணா நோன்பு இருந்து இறைவனை நினைத்திருப்பார்கள். நோன்பு என்பது வெறும் உணவை மட்டும் உட்கொள்ளாமல் இருப்பது அல்ல. தண்ணீர் குடிக்காமல், வேறு எந்த தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பதாகும்.

ரம்ஜான் மாதத்தில் அமாவாசையை தொடர்ந்து வரும் மூன்றாம் பிறை வரக்கூடிய நாள் புனித ரமலான் கொண்டாடப்பட்டு வருகிறது. பிறை தெரிவதை வைத்து ரமலான் பண்டிகை  வழக்கமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நேற்று வானில் பிறை தெரிந்ததால் தமிழகத்தில் இன்றுரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இதன் மூலம் தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகையானது இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக முஸ்லிம்கள் உற்சாகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.