ஈசியா ஜெயிக்க வேண்டிய ஆட்டத்தை கஷ்டப்பட்டு ஜெயித்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான IPL போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.


மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு  இடையிலான இன்றைய  ipl போட்டியில்   ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்றது.  இதனை அடுத்து இந்த அணி, மும்பை இந்தியன்ஸ்- ஐ  முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.  ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் டீ  காக் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 

இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 96 ரன்களை சேர்த்தது.  சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 47 ரன்களை எடுத்தார். தொடர்ந்து ஆடிய டீ  காக் 52 பந்துகளில் 81 ரன்களை எடுத்தா. கடைசியில் களமிறங்கிய ஹர்டிக் பாண்டியா அதிரடியாக 28 ரன்களை சேர்த்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆர்ச்சார் சிறப்பாக பந்து 3  விக்கெட்களை எடுத்தார். 

பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பட்லர் மற்றும் ரஹானே சிறப்பாக விளையாடி நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தனர்.ரஹானே 37 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பட்லர் வுடன் சாம்சன் இணைந்தார். சாம்சன் 31 ரன்கள் எடுத்தார். சிறப்பாக விளையாடிய பட்லர் 43 பந்துகளில் 89 ரன்களை எடுத்தார்.