குப்பை பொறுக்கிக் கொண்டிருந்த நபருக்கு கிடைத்த விலைமதிப்பு இல்லாத அதிர்ஷ்டப் பொருள்..! ஒரே நாளில் கோடீஸ்வரனாக்கிய நிகழ்வு! என்ன தெரியுமா?

குப்பை பொறுக்கி வரும் நபர் திமிங்கலத்தின் வாந்தியை எடுத்துள்ளதால் கோடீஸ்வரர் ஆகியுள்ளது தாய்லாந்து நாட்டில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


தாய்லாந்து நாட்டில் சோம்சாக் பூண்ரித் என்ற 45 வயது மீனவர் வாழ்ந்துவருகிறார். சென்ற புயலில் அவருடைய படகு தரைமட்டமானது. இதனால் அவர் தற்போது குப்பை பொறுக்கி வாழ்க்கையை நடத்தி வருகிறார். இதனிடையே ஞாயிற்றுக்கிழமை அன்று கடற்கரையில் திமிங்கலத்தின் வாந்தி என்று அழைக்கப்படும் மெழுகு பந்தை அவர் கண்டுபிடித்துள்ளார்.

திமிங்கலங்கள் கடலுக்குள் அரிய வகை மீன்களை சாப்பிடும். சில மீன்களை திமிங்கலங்கள் சீரணிக்காமல் வயிற்றுக்குள்ளேயே வைத்திருக்கும். அவை சில நாட்கள் கழித்து மெழுகு பந்து போன்ற வாந்தியாக வெளியேறும். இந்த மெழுகு பந்து வாசனை திரவியங்களை உற்பத்தி செய்வதற்கு மிகவும் தேவைப்படுகின்றன. இவற்றின் விலை கற்பனைக்கு எட்டாத அளவிற்கு உயர்ந்திருக்கும்.

தனக்கு கிடைத்த மெழுகு பந்தை அவர் தீயில் இட்ட போது, அது உருக தொடங்கியது. மீனவர் என்பதால் திமிங்கலம் வாந்தியின் தன்மையை அவர் ஏற்கனவே அறிந்திருந்தார். அதன் மதிப்பு, தற்போதைய நிலைக்கு 80,000 பவுண்ட் (1,85,29,783 கோடி ரூபாய்) விற்கும் என்று உள்ளூர் ஊடகங்களால் கணிக்கப்பட்டுள்ளது.

குப்பை பொறுக்கி கொண்டிருந்தவர் அதிர்ஷ்டத்தால் கோடீஸ்வரராக இருக்கும் செய்தி தாய்லாந்து நாட்டில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.