புதுச்சேரி: விபசாரம் செய்து வந்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாடகை வீடு..! வெளிமாநில அழகிகள்..! புதுச்சேரியில் விபச்சாரம் கன ஜோர்!

அரியாங்குப்பம், கப்சியல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக, புதுச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், எஸ்ஐ புருஷோத்தமன் தலைமையில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். இதில், மஞ்சுளா என்ற 40 வயது பெண் விபசாரம் நடத்தி வந்தது உறுதியானது.
அவரிடம் வாடிக்கையாளர்களாக வந்திருந்த வினோத்குமார் (30 வயது), ஜெகன் (30 வயது) ஆகியோரையும் சம்பவ இடத்தில் இருந்து போலீசார் கைது செய்தனர். இதுதவிர, அந்த வீட்டில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் 2 பேரையும் மீட்டு பெண்கள் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.