ஆன்லைனில் ஆண்களுடன் விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் அரை மணி நேரத்திற்கு ஆயிரம் ரூபாய் வசூலிப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரை மணி நேரத்திற்கு 1000 ரூபாய்..! ஆன்லைனில் ஆண்களுடன் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள்..! ஒரு பரபர ரிப்போர்ட்!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பலரும் தங்களுடைய அன்றாட வேலைகளை இழந்து வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையை அடைந்துள்ளனர். இதேபோல் பாலியல் தொழில் செய்யும் பெண்களும் தங்களுடைய வருமானத்தை இழந்து விட்டதால் புதிய முயற்சியை கையாண்டுள்ளனர். அதாவது இணையத்தின் வாயிலாக வீடியோ கால் செய்து அதன் மூலம் வாடிக்கையாளர்களை தன்வசப் படுத்துகிறார்கள் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தொழிலதிபர் சஞ்சேஷ் தாமஸ் பெங்களூருவை சேர்ந்தவர். இவர் வணிக பாலியல் தொழிலாளியுடன் நேரத்தை செலவிடுவதற்காக அடிக்கடி நகருக்குச் செல்வது வழக்கம். ஆனால் தற்போது உள்ள நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தாமஸும் பாலியல் தொழில் செய்யும் அந்த பெண்ணும் ஜூம் கால் மூலமாக விபச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். அந்தப்பெண் எப்பொழுதும் குறிப்பிட்ட நேரத்தைக் கூறி வீடியோ காலுக்கான லிங்க் ஐ அனுப்பி வைப்பாராம். பின்னர் அவர் அளிக்கும் பாஸ்வேர்டை பயன்படுத்தி தாமஸ் அதை ஆன் செய்வார் என்று கூறியிருக்கிறார்.
இதற்கு அந்த பாலியல் தொழில் செய்யும் அந்த பெண் அரை மணி நேரத்திற்கு ஆயிரம் ரூபாய் என்று கட்டணம் வசூலிப்பாராம். வீடியோ கால் முடிந்த பின்பு பலரும் பணத்தை சரியாக செலுத்த மாட்டார்கள் என்பதால் கால் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பேடிஎம் அல்லது கூகுள் பே ஆகியவற்றை பயன்படுத்தி ஒவ்வொருவரும் கட்டணத்தை செலுத்தி விட வேண்டுமாம். பின்னர்தான் காட்சிகள் ஆரம்பிக்கும் எனவும் கூறப்படுகிறது . இதுகுறித்து அந்த பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்ணிடம் கேட்ட பொழுது, நாங்கள் ஒருவேளை இடைவேளை விட்டுவிட்டால் எங்களுடைய வாடிக்கையாளர்கள் மற்றவர்களை தேடி செல்ல அதிக வாய்ப்பு உள்ளதால் நாங்கள் இந்த முறையை கையாண்டு வருகிறோம் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த தகவலானது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.