குழந்தை பிரசவத்திற்கு பிறகு பால் குடித்து வளரும். ஆனால் வயிற்றில் இருக்கும்போது சிசுவுக்கு பால் போன்று உணவாக பயன்படுவது கால்சியம் சத்துதான். இது தாயின் உணவு மூலமாகத்தான் குழந்தைக்கு செல்லவேண்டும். அதனால் ஒவ்வொரு தாயும் தேவையான அளவுக்கு கால்சியம் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
வலுவான ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க என்ன செய்யனும் தெரியுமா?
• குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கும் எலும்பு அடர்த்திக்கும் கால்சியம் அவசிய தேவையாக இருக்கிறது.
• வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு அளவுக்கு அதிகமான கால்சியம் தேவைப்படுவதால், தாய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுவிடாமல் கால்சியம் உணவுகள் கொடுக்கப்பட வேண்டும்.
• குழந்தைக்கு போதுமான அளவு பால் சுரப்பதற்கும், கூடுதலாக பால் சுரப்புக்கும் கால்சியம் அவசியம் தேவைப்படுகிறது.
• தாய் அல்லது குழந்தைக்கு கால்சியம் பற்றாக்குறை ஏற்படுவது பிரசவத்திலும், பிரசவத்திற்கு பிறகும் ஏராளமான பின்விளைவுகள் ஏற்படுவதற்கு காரணமாக அமையலாம்.
நகம் உடைதல், பல்வலி, மூட்டுவலி, அடிக்கடி காய்ச்சல் போன்றவை ஏற்படுவதற்கு கால்சியம் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம். அதனால் பால், தயிர், சீஸ், பச்சை இலைக் காய்கறிகள், பாதாம், மீன் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். உணவில் போதுமான கால்சியம் பெறமுடியாதபட்சத்தில் மருத்துவர் ஆலோசனை பேரில் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.