புட்டத்தில் லத்தி..! ஆசன வாய் வழியாக வந்த ரத்தம்!வியாபாரிகளுக்கு நேர்ந்த பயங்கரம்! சாத்தான் குளம் போலீஸ் ஸ்டேசனில் நடந்தது என்ன?

ஊரடங்கு விதிகளை மீறியதாக காவல்துறையினர் கைது செய்த தந்தை மற்றும் மகன் சிறையிலேயே உயிரிழந்த சம்பவமானது தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் என்ற இடம் அமைந்துள்ளது. இங்குள்ள சந்தை பகுதியில் ஜெயராஜ் என்பவர் செல்போன் கடை நடத்தி வந்தார். ஊரடங்கு காலத்தில் அவருக்கு துணையாக அவருடைய மகன் பெனிக்ஸ் இமானுவல் செயல்பட்டு வந்துள்ளார். 19-ஆம் தேதி இரவன்று ஊரடங்கு நேரத்தில் விதிகளை மீறி சில நிமிடங்கள் அதிகமாக கடையை இயக்கியதற்காக ஜெயராஜை ஆய்வாளர் கைது செய்து அழைத்து சென்றனர்.

தந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்கின்றனர் என்ற தகவல் கிடைத்தவுடன் பென்னிக்ஸ் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் பென்னிக்ஸையும் கைது செய்தனர். கைது செய்த பின்னர் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளாக நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகள் நேரடியாக ஆஜர் படுத்தப்படுவதில்லை. ஆதலால் ஜெயராம் மற்றும் அவருடைய மகனால் தாங்கள் தாக்கப்பட்டது குறித்து கூற இயலவில்லை. தாக்குதல் நடத்திய பிறகு அவர்களுக்கு எந்த ஒரு சிகிச்சையும் அளிக்கப்படுவதில்லை. 

வலியால் துடிதுடித்து பென்னிக்ஸ் நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவிலும், ஜெயராஜ் நேற்று அதிகாலை 4:30 மணியளவிலும் உயிரிழந்தனர். அவர்களுடைய உடல்கள் தற்போது பாலயங்கோட்டை மருத்துவக் கல்லூரியிலுள்ளன. இந்நிலையில் நேற்று ஜெயராஜின் மனைவி நீதிமன்றத்தில் மனு ஒன்று அளித்திருந்தார்.

அதாவது, "இருவரின் பிரேத பரிசோதனையையும் 3 மருத்துவர்கள் அடங்கிய குழு மேற்கொள்ள வேண்டும். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். பிரேத பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனமானது நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை ஏற்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இந்நிலையில் ஜெயராஜ் உறவினர்கள் அவர்கள் காவல்துறையினரால் கொடுமைப்படுத்தப்பட்ட உயிரிழந்தனர் என்று குற்றம் சுமத்துகின்றனர். ஜெயராஜ் மகன் பெனிக்ஸின் ஆசனவாயுவில் லத்தியை வைத்து காவல்துறையினர் குத்தியதால் மட்டுமே அவர் இறந்தார் என்று கூறியுள்ளனர். இருவரின் மறைவானது நேற்று சாத்தான்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.