போலீஸ்காரரை உயிர் பிச்சை கேட்க வைத்த கஞ்சா மணி இப்போது மாவுகட்டு மணி..! வெளியானது பரிதாப நிலை போட்டோ!

மத்திய தொழில் படைவீரர்களை கொலை செய்த கஞ்சா மணியை காவல்துறையினர் கைது செய்திருப்பது கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நெய்வேலியிலுள்ள அடர்ந்த காட்டு பகுதிகளில் கஞ்சா அதிகளவில் வளர்க்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கஞ்சா செடிகளை கஞ்சாமணி என்ற ரவுடி தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நெய்வேலி சுரங்கத்தில் காப்பர் திருடுவதற்கு ரவுடி கஞ்சாமணி தன்னுடைய கூட்டாளிகளுடன் சென்றுள்ளான். என்எல்சி இரண்டாம் நிலக்கரி சுரங்கத்தில் காப்பாற்றுவதற்காக சென்றபோது மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரான செல்வேந்திரன் என்பவரை ரவுடி கும்பல் கத்தியால் தாக்கிவிட்டு காப்பர் திருடி சென்றுள்ளது.

மற்றொரு பாதுகாப்புப்படை வீரரான தாஸ் என்பவர் ரவுடி மணியை பின்தொடர்ந்து சென்று அவனுடைய இருசக்கர வாகனத்திலிருந்து சாவியை எடுத்து ஆவேசமாக சண்டை போட்டுள்ளார். அப்போது அவர் சுற்றியிருந்த கஞ்சா போதை கும்பலிடம் தனியாக சிக்கிக்கொண்டார். அவரை முட்டி போட வைத்து சில நிமிடங்கள் பேசிய பிறகு ரவுடி கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்கிறது.

இந்த சம்பவத்தை வீடியோ எடுக்க முயன்ற மற்றொரு அதிகாரி, காவல்துறை அதிகாரி ஒருவரின் பெயரை கூறிக்கொண்டு தப்பி செல்கின்றார். பட்டப்பகலிலேயே மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரை கொலை செய்யும் அளவிற்கு ரவுடி கஞ்சா மணியின்  செல்வாக்கு உயர்ந்திருக்கிறது என்று மத்திய பாதுகாப்பு படையினர் கூறுகின்றனர்.

உள்ளூர் காவல்துறையினர் ரவுடி கஞ்சா மணிக்கு ஆதரவாக செயல்பட்டு, அவனை சுதந்திரமாக அலைய விடுகின்றனர் என்றும் ஆகிய பாதுகாப்பு படையினர் வேதனைப்படுகின்றனர். இந்த சம்பவமானது நெய்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் வீரியம் அடைய தொடங்கியவுடன் மாவட்ட காவல்துறையினர் கஞ்சா மணியை கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி காவல்துறையினர் கஞ்சா மணியை துரத்தி கொண்டிருந்தபோது, சுவர் ஏறி தப்பிக்க முயன்ற கஞ்சா மணி கீழே விழுந்து கைகால்களை உடைத்து கொண்டான். உடனடியாக காவல்துறையினர் கடலூர் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்து கை கால்களுக்கு மாவுக்கட்டு போட்டுள்ளனர்.

சிகிச்சை முழுவதுமாக முடிந்த பின்னர் கஞ்சா மணியை நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையிலடைக்க திட்டமிட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது நெய்வேலியில் சுற்று வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.