நள்ளிரவு கழிவறைக்கு சென்ற தந்தை, மகன்கள் அங்கேயே மயங்கி விழுந்தனர்..! ஒருவர் உயிரிழப்பு..! கோவை பரபரப்பு! அதிர்ச்சி காரணம்!

கழிவறையிலிருந்து வெளியான விஷவாயு சுவாசிப்பதால் ஒருவர் மரணமடைந்த சம்பவமானது கோயம்புத்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோயம்புத்தூர் மாவட்டத்தில் பீளமேடு என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீதர் என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவருக்கு பாலாஜி மற்றும் முரளி ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 

இருவருக்கும் 40 வயது மேலாகியிருந்தாலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 2:30 மணியளவில் ஸ்ரீதர் கழிவறை சென்றுள்ளார். ஆனால் அவர் நெடுநேரமாகியும் கழிவறையிலிருந்து வெளியே வரவில்லை. 

உடனடியாக தன்னுடைய தந்தையை பார்க்க இளைய மகன் முரளி சென்றார். அவரும் நெடுநேரமாகியும் திரும்ப வரவில்லை. பின்னர், பாலாஜியும் இருவரையும் தேடி சென்றார். 3 பேரும் நெடுநேரமாகியும் கழிவறையிலிருந்து வராததால் சந்தேகித்த தாயார் அங்கு சென்று பார்த்தார். 

அப்போது 3 பேரும் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு தாயார் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக செல்போன் மூலம் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்களை கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு 3 பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள், 2 பேர் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாகவும். பாலாஜி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும் கூறியுள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாலாஜியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

பிரேத பரிசோதனையில் கழிவறையிலிருந்து வெளியான விஷவாயு தாக்கியதால் பாலாஜி உயிரிழந்தார் என்று கூறப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிகழ்வானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.