டெல்லி: மீண்டும் மோடி பிரதமராக வரக்கூடாது, என பிரதமர் அலுவலக அதிகாரிகள் கடும் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் மோடியா? எங்களுக்கு வேலையே வேண்டாம்! தெறித்து ஓடும் பிரதமர் அலுவலக அதிகாரிகள்!

கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதும், பிரதமர் பதவியேற்ற மோடி, உடனடியாக, பிரதமர் அலுவலகம் உள்பட அனைத்து முக்கிய துறைகளிலும், குஜராத்தை சேர்ந்த அதிகாரிகளையே தலைமை பொறுப்பில் நியமித்தார். இவ்வாறு பணியமர்த்தப்பட்ட அதிகாரிகள் மீது பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும், அவர்கள் விசுவாசமாக இருக்கிறார்களா என்று மட்டுமே, பார்ப்பது வழக்கம்.
அத்துடன், மோடிக்குப் பிடித்தவர்களுக்கே அதிக முன்னுரிமை தரப்பட்டு வருவதால், மத்திய அமைச்சரவையில் பணிபுரியும் அதிகாரிகள் அனைவரும் கடும அதிருப்தியில் உள்ளனர்.ஒருவேளை, மோடி மீண்டும் பிரதமராக வந்தால், பதவி விலகுவது அல்லது பணியிட மாற்றம் வாங்கிச் செல்வது என்ற முடிவுக்கு பல அதிகாரிகள் வந்துவிட்டார்களாம்.
கடந்த வாரம் கூட,பிரதமர் அலுவலக அதிகாரிகளை அழைத்து, அமித் ஷா, எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. இடதுசாரி சிந்தனை உள்ள அதிகாரிகளை, அமித் ஷாவுக்கும், மோடிக்கும் பிடிப்பதில்லை என்பதே இதற்கான முக்கிய காரணம் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.