தற்கொலை செய்துகொண்ட எஜமானி! உடலை நெருங்க விடாத வளர்ப்பு பிராணி! நெகிழ வைத்த சம்பவம்!

தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சடலத்தை யாரையும் நெருங்கவிடாமல் வளர்ப்பு நாயானது பாதுகாத்த சம்பவமானது அனைவரையும் கலங்க வைத்துள்ளது.


வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு தனசேகரன் என்பவர் வாழ்ந்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் ராதா. இத்தம்பதியினருக்கு 2 பிள்ளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தனசேகர் வாட்டர் கேன் தொழிலில் ஈடுபட்டு வந்தார். 

தன் தொழிலை மேம்படுத்துவதற்காக தனசேகரன் பல இடங்களில் கடன் வாங்கி இருந்தார். ஆனால் தொழிலை அவரால் மேம்படுத்த இயலவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு அவரை தொந்தரவு செய்தனர். கடன் தொல்லை அதிகமானதால் தனசேகரன் மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு தலைமறைவானார்.

அப்போது கடன் கொடுத்தவர்கள் ராதாவை தொல்லை செய்ய தொடங்கினர். ஒரு கட்டத்திற்கு மேல் ராதாவால் பிரச்சனைகளை சமாளிக்க இயலவில்லை. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடல் அவர் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.  

காவல்துறையினர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதற்காக வீட்டிற்கு விரைந்தனர். ஆனால் ராதா வளர்த்த செல்ல நாயானது அவரின் உடலை யாரையும் தொட விடாமல் பாதுகாத்து கொண்டிருந்தது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் கண் கலங்கினர்.

காவல்துறையினர் ஒருவழியாக நாயை அனுப்பி வைத்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.