தந்தைக்காக நெஞ்சைக் கிழித்து அந்த உறுப்பை எடுத்து தானமாக கொடுத்த மகன்..! கேட்போரை நெகிழ வைத்து சம்பவம்!

பிரபல இளம் மலையாள இயக்குனர் தன்னுடைய தந்தையின் அறுவை சிகிச்சைக்காக தனது கல்லீரலை தானமாக அளித்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல இளம் இயக்குனராக வலம் வருபவர் அதின் ஒல்லூர். இவரது தந்தைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கல்லீரல் செயல் இழந்து விட்டதாக கூறியுள்ளனர். ஆகையால் யாரேனும் முன்வந்து அவருக்கு கல்லீரல் தானம் அளித்தால் மட்டுமே உயிர்பிழைக்க இயலும் என்றும் கூறியுள்ளனர். 

இதனையடுத்து இயக்குனர் அதின் தன்னுடைய தந்தைக்கு தானே தனது கல்லீரலை தானம் செய்வதற்கு முன் வந்துள்ளார். இதனையடுத்து கடந்த மே மாதம் 18 ஆம் தேதி அன்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. வெற்றிகரமாக அதனின் கல்லீரலை மருத்துவர்கள் அவரது தந்தைக்கு மாற்றம் செய்துள்ளனர். இதனைப்பற்றி முதல் முறையாக இயக்குனர் அதில் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

அதாவது இயக்குனர் அதின் வெளியிட்டுள்ள அந்த பதிவில், என்னுடைய தந்தைக்கு கல்லீரல் அளிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. வெற்றிகரமாக அறுவை சிகிச்சையும் முடிவடைந்துள்ளது. நாங்கள் இருவரும் நலமாக உள்ளோம். நான் இன்றைய தினம் டிஸ்சார்ஜ் ஆகிறேன். என்னுடைய தந்தையும் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக உள்ளார். என் தந்தையின் உடல்நலம் சரியாக வேண்டும் என்று எங்களுக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று இயக்குனர் அதின் அந்த பதிவில் கூறியிருந்தார். தற்போது இயக்குனர் அதின் வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.