இந்திய பவுலர்களை பந்தாடிய நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள்! ஜெயிக்குமா இந்திய அணி!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 203 ரன்கள் குவித்துள்ளது.


டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து ஆடினர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் காலின் மன்றோ சிறப்பாக ஆடி 59 ரன்களும், ராஸ் டைலர் 54 ரன்களும் குவித்தனர். இதனால் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்துள்ளது.

இந்திய அணியின் சார்பில் பும்ரா , சிவம் துபே, ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியை பொறுத்தவரை இந்த போட்டியில் லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ரிஷப் பண்ட் அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை இந்தியா சேஸ் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.