திருமணமாகி 4வது நாள்..! நடு வீட்டில் சடலமாக தொங்கிய புதுப்பெண்! நேரில் பார்த்து அதிர்ந்த கணவன்! தேனி அதிர்ச்சி!

திருமணமான 4-வது நாளிலேயே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் அரசரடி என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு மணிகண்டன்‌ என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய வயது 37. இவருக்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த தவச்செல்வி என்பவருடன் 4 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. 

தவச்செல்வி தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் காசாளராக பணியாற்றி வந்துள்ளார். இருவரும் வாடகை வீட்டில் ஆதிப்பட்டி என்னுமிடத்தில் வசித்து வந்தனர். இதனிடையே வங்கியில் வேலை அழுத்தம் அதிகமாக இருப்பதாக தவச்செல்வி மணிகண்டனிடம் கூறியுள்ளார்.

திருமணமான 4-வது நாளான நேற்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீடு திரும்பியவுடன் தன் மனைவி தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்ட மணிகண்டன், அலறியடித்துக்கொண்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அங்கு தவச்செல்வியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.  உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தவச்செல்வியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது  மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.