புத்தாண்டை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அமலா பால் அவரது செல்ல நாய்க்குட்டியுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஆடை இல்லாதது போல் தோற்றம் அளிக்கவே ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அய்யய்யோ மேடம் என்ன இது? ஆடை படத்திற்கு பின் மீண்டும் ஆடையின்றி புகைப்படம்? அமலாபாலின் வைரலாகும் புகைப்படத்தின் உண்மை பின்னணி!
இயக்குநர் எ.எல்.விஜய்யுடன் திருமண வாழ்க்கை முறிந்த பிறகு நடிகை அமலாபால் எப்போதும் தனது நாய்க்குட்டியுடன்தான் வலம் வருவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். புத்தாண்டுக்குப் பிறகு நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
அமலா பால் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்தவர்கள் ஷாக் ஆகிவிட்டனர். அந்த புகைப்படத்தில் அமலா பால் டிரெஸ் ஏதும் போடலையா என இன்ஸ்டாவில் கமெண்ட்டும் செய்து கலாய்த்து வருகின்றனர். முட்டிப் போட்டு தனது தொடையழகு தெரியும் படி நாய்க்குட்டியுடன் இருக்கும் அமலா பாலின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆடை அணியவில்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
அமலா பால் காதுகளில் தோடுகள் அழகாக இருப்பதாக சில ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். க்யூட் ஸ்மைலில் அழகாக இரு பொட்டும் வைத்து அம்சமாக இருக்கிறார் அமலா பால் என்றும் தெரிவித்துள்ளனர். அமலா பால் செல்ல நாய்க்குட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டவுடன், அந்த புகைப்படத்திற்கு கிட்டத்தட்ட 1.5 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது.
ரசிகர்கள் அந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர். அந்த ஆடை படத்திற்கு பிறகு அமலா பால் மீண்டும் சோலோ ஹீரோயினாக நடித்த அதோ அந்த பறவை போல படம் டிசம்பர் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெளியாகவில்லை. போல படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இம்மாதம் வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது