உல்லாசமாக இருந்த 12 பெண்களின் பெயரை வெளியிட்ட காசி..! நிர்வாண வீடியோ வெளியானது எப்படி? பரபரக்கும் நாகர்கோவில்!

போலீஸ் கஸ்டடியில் விசாரணையில் இருந்து வரும் நாகர்கோவில் காசி தன்னுடன் உல்லாசமாக இருந்த 12 பெண்களின் பெயரை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


தினந்தோறும் நாகர்கோவில் காசியின் விவகாரம் பல திருப்பங்களை சந்தித்து வருகிறது. பள்ளி சிறுமிகள் முதல் இளம் பெண்கள் குடும்பப் பெண்கள் உள்ளிட்ட பலரையும் தன்னுடைய காம வலையில் சிக்க வைத்து அந்தரங்க வீடியோக்களை எடுத்து அதன் மூலம் பணம் பறித்து வந்த அவர்களை போலீசார் பெண் மருத்துவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு முதலில் இந்த வழக்கை விசாரிக்க 3 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டது. அந்த முதல் விசாரணையின் பொழுது காசி இடமிருந்து போலீசார் எதிர்பார்த்து தகவலை பெரிதாக பெற முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் காசியின் மீது 17 வயது சிறுமி ஒருவர் புகார் அளித்தார். அதனால் காசியை போலீசார் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி இரண்டாவதாக விசாரணை நடத்த அனுமதி கேட்டனர். இதனையடுத்து போலீசாருக்கும் 6 நாட்கள் காசியை விசாரணை செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது. விசாரணையின் போது போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு காசி மிகவும் கூலாக பதில் சொல்கிறார் என்று கூறப்படுகிறது. ஒரு சில கேள்விகளுக்கு காசி தன்னுடைய வாயை திறப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. சமீப நாட்களாகவே காசி பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் சமூகவலைதளத்தில் வெளியாகிய வண்ணம் உள்ளன.

அதாவது காசி இளம்பெண்கள் குடும்பப் பெண்கள் உட்பட பலருடன் உல்லாசமாக இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஒவ்வொன்றாக இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி போலீசார் அவரிடம் விசாரணை செய்தபோது அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். போலீசார் காசியின் லேப்-டாப்பில் இருந்த வீடியோக்களை காண்பித்து இதில் இடம்பெற்றிருக்கும் பெண்கள் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். 

 முதலில் அவர்களைப் பற்றி ஒன்றும் சொல்ல முடியாது என்று கூறிய காசியை போலீசார் வாயை திறக்க வைத்துள்ளனர். தற்போது அவர் தன்னுடன் உல்லாசமாக இருந்த 12 பெண்களின் பெயர்களை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர்களிடம்.. நானா போய்ப் யாரையுமே ஏமாத்தல.. அவங்களா தேடித்தான் என்கிட்ட வந்தாங்க..என் உடம்புக்காக என்ன அவங்க யூஸ் பண்ணிக்கிட்டாங்க.. நானும் அவர்களை யூஸ் பண்ணிக்கிட்டேன் என்று காசி வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

மேலும் காசி கூறி உள்ள அந்த 12 பெண்களின் பெயர் யாரென்று போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். காசியை போலீசார் விசாரணை செய்து வரும் அதே வேளையில் அவருடன் உல்லாசமாக இருந்து வந்த பல பெண்களின் நிர்வாண வீடியோக்கள் இணையத்தில் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்த வீடியோக்களை வெளியிடுவது வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் காசியின் நண்பராக இருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். விரைவில் இதனை போலீசார் ஊர்ஜிதப் படுத்துவார்கள் என நம்பப்படுகிறது. தற்போது இந்த சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.