ஈஸ்வர் செஞ்ச அந்த கேவலத்தை என் பொன்னு அவள் டீச்சர்ட்ட சொல்லியிருக்கா..! ஜெயஸ்ரீ வெளியிட்ட அடுத்த பகீர் தகவல்!

பிரபல சீரியல் நடிகர் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ தன் மகள் அவளது பள்ளி ஆசிரியரிடம் ஈஸ்வர் செய்த கொடுமைகளையும் , கேவலமான விஷயங்களையும் கூறியிருக்கிறாள் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.


சீரியல் நடிகர் ஈஸ்வருக்கு ஏற்கனவே திருமணமாகி ஜெயஸ்ரீ என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சீரியல் நடிகர் ஈஸ்வர் அதே சீரியலில் வில்லியாக நடித்து வரும் நடிகை மகாலட்சுமியுடன் தகாத உறவில் இருந்து வருவதாக சீரியல் நடிகர் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ யூட்யூபில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் அந்த வீடியோவில் தன்னையும் தன் குழந்தையையும் ஈஸ்வர் கொடுமைப் படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஒருமுறை தனது கணவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாகவும் , அதனால் நான் என்று நினைத்து என் மகளிடம் அவர் தவறுதலாக நடந்து கொண்டார் எனவும் நடிகரின் மனைவி ஜெயஸ்ரீ கூறியிருந்தார்.

மேலும் நடிகர் ஈஸ்வர் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் ஏன் நேர்காணல்களில் ஜெயஸ்ரீ தனது குழந்தையுடன் பேட்டி அளித்து வருகிறார். என் குழந்தையை விட்டுவிடுங்கள். என் குழந்தை மீது எனக்கு மிகவும் அக்கறை உள்ளது எனவும் ஈஸ்வர் பேட்டி அளித்திருந்தார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய அவரது மனைவி ஜெயஸ்ரீ ஈஸ்வருக்கு தனது மகளின் மீது அக்கறை இருந்தது உண்மைதான். ஆனால் கடந்த சில மாதங்களாக தன்னிடமும் ,தனது மகளிடமும் நடந்து கொண்ட விதத்தையும், எங்களை அடித்து கொடுமைப்படுத்திய விதத்தையும் அவள் நேரில் கண்டு இவரா இப்படி செய்கிறார், இவரா இப்படி உங்களை கொடுமைப்படுத்துகிறார் என்று விரக்தியின் உச்சத்தில் உள்ளார் எனவும் அவர் கூறியிருந்தார். 

மேலும் நேர்காணல்களில் என் குழந்தையுடன் கலந்து கொள்வது என்ன தவறு இருக்கிறது. நடந்து முடிந்த எல்லா விதமான பிரச்சினைகளையும் எனது மகளின் முன்னால் தான் என் கணவர் செய்தார். என் கணவர் என் மகளிடமும் தவறுதலாக நடந்துகொண்டார்.ஆகையால் என் மகள் நேர்காணல்களில் என்னுடன் கலந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை என ஜெயஸ்ரீ கூறியுள்ளார். 

மேலும் ஈஸ்வர் தவறாக நடந்து கொண்டதை பற்றியும் ,எங்களை கொடுமை படுத்திய பற்றியும் எனது மகள் அவளது பள்ளி ஆசிரியரிடமும் கூறி இருக்கிறார் எனவும் ஜெய்ஸ்ரீ கூறியுள்ளார். அவ்வளவு அவள் கொடுமை அனுபவித்ததால் தான் அவள் மனம் தாங்க முடியாமல் அவளது பள்ளி ஆசிரியரிடம் அவர் கூறியிருக்கிறார் எனவும் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.